Published on 28/01/2019 | Edited on 28/01/2019
![jacto geo](http://image.nakkheeran.in/cdn/farfuture/nX8sTDhrk2HpX3EY6PG6oSZt1_xaggn3QxZRt0uHThU/1548680422/sites/default/files/inline-images/jacto-geo-2.jpg)
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அலுவர்களை மீண்டும் பணிக்கு அனுப்ப ஏராளமான முயற்சிகளை எடுத்துவருகிறது அரசு. பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அரசு தற்போது புதிய ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி. ஸ்ட்ரைக்கில் உள்ள ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்பினால் அவர்கள் விரும்புகின்ற இடத்திற்கு பணியிடமாற்றம் வழங்கப்படும். என அறிவித்துள்ளது. இதன்மூலம் 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அழைப்புவிடுத்துள்ளது.