Skip to main content

முடக்கபட வேண்டியது இணையதளம் அல்ல... எடப்பாடி ஆட்சிதான்! - பிரேமலதா கண்டனம்!

Published on 24/05/2018 | Edited on 25/05/2018

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் வலுத்துவர, தேமுதிக மகளீரணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

வரலாற்றில்தான் ஜாலியன்வாலாபாத் படுகொலையை பார்த்திருக்கிறோம். தமிழகத்தில் முதல்முறையாக ஜாலியன்வாலாபாத் படுகொலைக்கு இணையாக தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் அவமான சின்னம். 22ம் தேதி தமிழ்நாட்டின் கருப்பு நாள். இன்றைக்கு ஒரு மானை சுட்டாவே தண்டனை கொடுக்கக்கூடிய நாட்டில் இருக்கிறோம். இதில் மனிதர்களை சுடக்கூடிய அதிகாரத்தை தந்தவர் யார்? நீங்க அப்படியே சுட வேண்டுமென்றால் வானத்தை பார்த்து தான் சுட வேண்டும். நெஞ்சை பார்த்து வாயை பார்த்து சுடுவதற்கு அதிகாரம் கொடுத்தது யார்?

 

premalatha

 

 

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற இடங்களில் இணையதளம் முடக்கப்பட்டதாக செய்தியை அறிந்தோம். முடக்கப்பட வேண்டியது இணையதளம் அல்ல. இந்த ஆட்சி. நேற்று எஸ்.பி.யையும், கலெக்டரையும் மாற்றினார்கள். மாற்றப்பட வேண்டியது இந்த அரசுதான். இந்த எஸ்.பி.யையும், கலெக்டரையும் மாற்றுவதால் தமிழகத்தில் எந்த மாற்றமும் நடைபெறாது. ஏனென்றால் 100 நாட்களாக அவர்கள் அறவழியில் தான் போராடினார்கள். அந்த போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். அவர்கள் நாங்கள் 100வது நாள் பேரணியாக கலெக்டர் அலுவலகத்துக்கு வருகிறோம் என்று முன்கூட்டியே சொல்லிவிட்டுதான் வந்தார்கள். இது வேண்டுமென்றே அந்த பேரணிக்கு அனுமதி கொடுத்தார்கள். அலுவலகம் வரை வருவதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள்? முதலிலேயே மக்களை காப்பதற்கும் சட்டத்தை காப்பதற்கும் அவர்கள் முன்கூட்டியே இதை செய்திருக்கலாம். இது திட்டமிட்டு படுகொலை செய்வதற்காக செய்யப்பட்ட விஷயமாக தான் மக்கள் கருதுகிறார்கள். இது வன்மையாக கண்டிக்கதக்கது.

 

100வது நாள் பேரணி வருகிறோம் என்று அவர்கள் முன்கூட்டியே அறிவித்துவிட்டுதான் வருகிறார்கள். அறிவிக்கமால் வரவில்லை. இன்றைக்கு 2000, 3000 போலீசை அனுப்புகிறவர்கள் ஏன் முன்கூட்டியே அனுப்பவில்லை? கலெக்டர் அலுவலகம் வரையும் ஏன் பேரணியை அனுமதிக்கிறீர்கள்? முன்கூட்டியே தடுத்திருக்கலாம். மக்களை பாதுகாக்க வேண்டிய அரசு திட்டமிட்டு மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி அடக்குமுறைகளை ஏற்படுத்தி மக்களுக்கு கொலை செய்திருக்கிறார்கள். 11 பேர் இறந்திருக்கிறார்கள் என்றால் ஒரு பேருக்கு 10 லட்சம்  அறிவிக்கிறது இந்த அரசு. வெக்கமாக இல்லை? அப்போ இங்கே ஒரு உயிரின் மதிப்பு 10 லட்சம். 10 கோடி கொடுத்தால் கூட அந்த குடும்பத்துக்கு போன உயிர் திரும்பி கிடைக்குமா? அதிகமான காயத்திற்கு 3 லட்சம், சாதாரண காயத்திற்கு ஒரு லட்சம் என்று சொல்லுகிறார்கள். எது செய்தாலும் காசு கொடுத்து வாயை அடக்க வேண்டும் நினைக்கிறது இந்த அரசு. மக்களுடைய எழுச்சி தமிழ்நாடு முழுக்க இருக்கிறது எனவே மாற்ற வேண்டியது தமிழக அரசும், செயலிழந்துள்ள எடப்பாடி ஆட்சியும் தான்.

 

மக்களின் போராட்டம் அதிகமான காரணத்தில்தான் இணையதளத்தை முடக்குகிறார்கள். தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பு கூடாது என்ற சொல்லுகிற நிலைமையை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய ஒரு அரசு, வாங்க வேண்டியதை வாங்கிக்கிட்டு ஸ்டெர்லைட்டுக்கும் அந்த முதலாளிக்கும் பாதுகாப்பு கொடுக்கும் நிலையை நாம் இன்றைக்குக் பார்கிறோம். இது உண்மையில் வெட்கபட வேண்டிய விஷயம்.

 

எதற்கு எடுத்தாலும் கேமரா முன்னாடி வந்து நிற்கிறார்கள் ஆட்சியாளர்கள். இந்த அரசு ஏன் ஸ்டெர்லைட்டில் நடந்த பாதிப்பை பார்க்கவில்லை? எனவே இதன் பின்னணியில் உள்ள ஒட்டுமொத்த சதியை ஒட்டுமொத்த  தமிழகமும் பார்த்து கொண்டுதான் இருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கக்கூடியது.

 

மக்களால் நான் மக்களுக்காக நான் என்று சொல்லுகிறார்கள். இந்த ஆளும் ஆட்சி மக்களுக்காக என்ன செய்தார்கள்? மக்களை சந்தித்து குறைகளை கேட்டீர்களா? ஒளிந்து மறைந்துகொள்ளக்கூடிய ஆட்சி இங்கே நடக்கிறது. இது உண்மையான ஆட்சியாக இருந்தால் மக்களை போய் சந்திக்க வேண்டியது தானே? இன்றைக்கு எல்லோருக்கும் பணம் விளையாடி இருக்கும் இது தான் உண்மை. இந்த மாபெரும் படுகொலைக்கு பின்னால் இருப்பது பணம் என்று தான் எல்லாரும் சொல்கிறார்கள். இது திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை. இந்தமாதிரி நிகழ்வு தமிழ்நாட்டில் நடக்காத வண்ணம் மாபெரும் மாற்றம் தமிழ்நாட்டுக்கு வேண்டும்.

 

இன்றைக்குதான் மின் இணைப்பை துண்டித்து இருக்கிறார்கள். விரிவாக்கம் செய்வதை தான் தடை செய்து இருக்கிறார்கள். ஆலையை மூட போகின்றோம் என்ற தகவல் வரவில்லை, ஆகவே இவையெல்லாம் ஒரு கண்துடைப்பு. இந்த ஆட்சி மக்களுக்காக செயல்பட வேண்டும். ஆலைக்காக அல்ல. நிச்சயமாக மக்கள் அதை நிருபிப்பார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

'இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டி கொடுத்திருக்கிறோம். கட்டி 3 வருடம் ஆகிறது. 1200 கோடியில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா என பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் ஒற்றைச் செங்கலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக போகிறீர்களே உதயநிதி ஸ்டாலின் பல லட்சம் செங்கலில் கட்டி இருக்கிறோம் ஏன் அதை திறக்க மாட்டேன் என்கிறீர்கள்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் என்று இன்றுவரை ரிப்பன் வெட்டுவதற்கு உங்களால் முடியவில்லை. மூன்று வருடம் ஆகிறது. இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது. என்ன கொடுமை பாருங்கள் நிறைவேற திட்டத்தை செங்கல்லை தூக்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் கட்டிமுடித்த திட்டத்தை திறக்க முடியாத ஒரே அரசு திமுக அரசு. இந்த திட்டம் கொண்டுவரக் கூடாது என்று பார்க்கிறார்கள்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டம். கால்நடை பூங்கா திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். அமெரிக்கா செல்லும் பொழுது அங்கு ஒரு பால் பண்ணைக்கு சென்றேன். அங்கு ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்கிறது. அந்த பசு போல நம்முடைய மாநில சீதோசன நிலைக்குத் தக்கவாறு கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகள் கொடுக்க வேண்டும். 40 லிட்டர் பாலை ஒரு நாளைக்கு கறந்து அவர்கள் வருமான பெருக வேண்டும் என்பதற்காக இந்த அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தேன். அதில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் உள்ளது . அதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு கிடைக்கும் கால்நடைகளை விவசாயிகளுக்கு கொடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள். இன்று நாம் ஒரு ஆடு வளர்த்தால் 20 கிலோ தான் கிடைக்கும். ஆனால் கலப்பின ஆடு வளர்த்தால் 40 கிலோ கிடைக்கும். இந்த திட்டத்தை முடக்கி வைத்த அரசாங்கம் திமுக அரசாங்கம். கால்நடை பூங்கா வந்திருந்தால் இந்தப் பகுதி பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும். உலக அளவில் நம்முடைய சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பிரசித்தி பெற்றிருக்கும்'' என்றார்.

Next Story

''அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்''-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 'Who will go missing will be known after June 4'-Edappadi Palaniswami speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரியலூரில் நடைபெற்று வரும் பிரச்சாரக் கூட்டத்தில் சிதம்பரம் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், ''எங்களை மிரட்டி பார்க்கும் வேலையெல்லாம் வேண்டாம். அதிமுக என்ற கட்சி அதிக தொண்டர்களைக் கொண்டது. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் உள்ளனர். எங்களைச் சீண்டி பார்க்காதீர்கள். அப்படி பார்த்தால் எப்படி இருக்கும் என அதிமுக தொண்டர்கள் காட்டுவார்கள்.

வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி விட்டதால் சிலர் எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுக என்றைக்கும் பயப்படாது. அதிமுகவை அழிக்க நினைத்த சிலர் தற்போது பழத்தை தூக்கிக் கொண்டு அலைகின்றனர்.  உண்மையில் யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு தெரியவரும். அண்மையில் பார்த்தால் திமுக அயலக அணி துணை அமைப்பாளர் என்ற திமுக நிர்வாகி இரண்டு ஆண்டு காலமாக வெளிநாட்டுக்கு போதைப் பொருளை கடத்தி கொண்டிருக்கிறார். நீங்களே பாருங்கள்'' என முதல்வருடன் ஜாபர் சாதிக் எடுத்த புகைப்படத்தைக் காட்டினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் உடன் ஜாபர் சாதிக் இருக்கும் புகைப்படத்தையும் காட்டினார்.

பின்னர் மீண்டும் பேச தொடங்கிய எடப்பாடி, ''முதலமைச்சரோடு நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். பின்னர் விளையாட்டுதுறை அமைச்சருடன் நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். போட்டோ எடுத்துக் கொள்ளட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. நான் வரும்போது கூட நிறைய போட்டோ எடுத்தாங்க. ஆனால் அவருடைய கட்சி நிர்வாகி, பொறுப்பில் உள்ள நிர்வாகி போட்டோ எடுத்துள்ளார். தனிப்பட்ட முறையில் புகைப்படம் எடுத்துள்ளார்கள். இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்திய ஆசாமிக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என மக்கள் கேட்கிறார்கள். மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை முதல்வருக்கும் விளையாட்டுதுறை அமைச்சருக்கும் இருக்கிறது.

ஆறு மாதத்திற்கு முன்பு திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் 'நான் இரவில் படுத்து தூங்கி காலையில் கண்விழித்து பார்க்கும் பொழுது என்னுடைய கட்சிக்காரர்களால் என்ன பிரச்சனை வந்து விடுமோ என்ற அச்சத்தில் கண் விழிக்கிறேன்' என்கிறார். இதை நான் சொல்லவில்லை திமுக தலைவர் சொல்கிறார். அப்படி என்றால் அந்தக் கட்சியினர் எப்படி அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை அவரே சொல்லிவிட்டார். நாம் சொன்னால் கூட வேண்டுமென்று எதிர்க்கட்சி குற்றம் சுமத்துகிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் திமுக தலைவரே அவருடைய கட்சிக்காரர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார். மக்களுக்கு எதிரான திட்டங்களை பாஜக கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது. ஆனால் அதேநேரம் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் பாராட்டவும் செய்வோம். எதிர்க்கும் போது எதிர்ப்போம்; பாராட்டும் போது பாராட்டுவோம் என்பதே அதிமுகவின் ஸ்டைல். கூட்டணியை நம்பி அதிமுக தேர்தலைச் சந்திக்கவில்லை. மக்களை நம்பியே இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம். கூட்டணியிலிருந்த வரை பாஜகவிற்கு விசுவாசமாக இருந்தோம். தற்பொழுது விலகி விட்டோம். பாஜகவை எதிர்க்கவில்லை என்கின்றனர், அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்'' என்றார்.