Skip to main content

பிரபல ஜவுளிக்கடையில் இரண்டாவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு

Published on 03/11/2022 | Edited on 03/11/2022

 

IT raid continues for second day siva textiles karur

 

கரூர் சிவா டெக்ஸ் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

கரூர் மாநகரில் பிரபல ஜவுளிக்கடையான சிவா டெக்ஸ்டைல்ஸ் கடையில் நேற்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபடத் தொடங்கினார். சோதனையானது கரூர் ஜவகர் பஜார் சிவா டெக்ஸ்டைல்ஸ் ஜவுளிக்கடை, ஜவுளி வைக்கும் கிடங்கு, ஆண்டாள் கோவில் பகுதியில் உள்ள வீடு, குளித்தலையில் உள்ள சிவா டெக்ஸ்டைல்ஸ் ஜவுளிக்கடை மற்றும் வீடு என ஐந்து இடங்களில் நேற்று தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நடைபெற்றது.

 

இதனையடுத்து இரண்டாவது நாளான இன்றும் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெறும் சோதனையால் இவர்கள் வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் எனத் தெரியவருகிறது. வருமான வரித்துறை சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்படலாம் என்றும் இறுதியில்தான் இது குறித்து முழு விவரம் தெரியவரும் எனவும் சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்