Skip to main content

நீர்ப்பாசன திட்டங்களை உடனே நிறைவேற்ற வேண்டும்- கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆர்ப்பாட்டம்

Published on 13/10/2018 | Edited on 13/10/2018

 

kongu

 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக தமிழகத்தில் நீர் பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் சேலத்திலும் மற்ற நிர்வாகிகள் ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல்லில் நேற்று ஆர்பாட்டம் நடத்தினார்கள் அதில்,

 

"தமிழகத்தில் 60 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள நீர்பாசன திட்டங்களை எல்லாம் உடனடியாக நிறைவேற்றினால் மட்டுமே தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையிலிருந்து தப்பிக்க முடியும். இந்தாண்டு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையில் கர்நாடக அணைகள் நிரம்பி, தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 

 

kongu

 

காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 2013-ஆம் ஆண்டுக்கு பிறகு 5-ஆண்டுகள் கழித்து மேட்டூர் அணை மீண்டும் நிரம்பி வழிந்தது. காவிரியில் தமிழகத்திற்கு கிடைத்த தண்ணீரில் முக்கால்வாசி உபரிநீராக கடலில் கலந்ததே தவிர தமிழக மக்களுக்கு துளியும் பயன்படவில்லை. அதேபோல் பவானிசாகர், அமராவதி, திருமூர்த்தி மற்றும் ஆழியாறு உள்ளிட்ட அணைகளும் நிரம்பி உபரிநீர் வீணாக கடலில் கலந்தது. 

 

 

மேட்டூர் அணை நிரம்பி காவிரியில் வெள்ளப்பெருக்கு எடுத்துவிட்டால் தமிழகத்தின் மொத்த தண்ணீர் தட்டுப்பாடும் தீர்ந்துவிட்டது போல ஒரு மாய தோற்றம் உருவாகிறது. தமிழகத்தின் காவிரி கரையோர பகுதிகளை தவிர உள்மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் சூழ்நிலையே தொடர்கிறது. 

 

கடலில் வீணாக கலக்கும் உபரிநீரை மக்களின் பயன்பாட்டிற்காக உள்மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் கிடப்பில் உள்ள நீர்பாசன திட்டங்களையும், நதிகளை இணைக்கும் திட்டங்களையும் அந்தந்த பகுதிகளில் நிறைவேற்றினால் மட்டுமே தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முடியும். அமராவதி, நொய்யல், திருமணி முத்தாறு மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் உள்ளிட்டவைகளில் சாயக்கழிவுகளை அனுமதி இல்லாமல் கொட்டி வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு நிலத்தடிநீரும் மாசடைந்து வருகிறது. இந்த மாசடைந்த தண்ணீரை பயன்படுத்துவதால் புற்றுநோயாலும், மலட்டுத்தன்மையாலும் மற்றும் தோல் வியாதிகளாலும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

 

 

ஒவ்வொரு தேர்தலின்போதும் குறிப்பாக கொங்கு மண்டல மக்களுக்கு வாக்குறுதிகளாக கொடுக்கப்படும் நீர்பாசன திட்டங்களான மேட்டூர் உபரிநீர் திட்டம், திருமணி முத்தாறு – கோரையாறு இணைப்பு திட்டம், சரபங்கா – வசிஷ்ட நதி திட்டம், அவினாசி - அத்திக்கடவு திட்டம், ஆனைமலையாறு – நல்லாறு திட்டம், பாண்டியாறு – புன்னம்புழா திட்டம், மணியாச்சி – வழுக்குபாறை திட்டம், T.N.பாளையம் - வேதபாறை தடுப்பணை திட்டம் மற்றும் தோனிமடுவு திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றக் கோரியும், ஆறுகளில் சாயக்கழிவு கலப்பதை தடுக்கக்கோரியும், ஏரி, குளங்களை சரிவர தூர்வார வேண்டும்"  என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்  ஆர்ப்பாட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .