Skip to main content

கரையே இல்லாத ஆறா? தாசில்தார் அளித்த பதிலால் அதிர்ந்த நீதிபதிகள்

Published on 21/07/2018 | Edited on 27/08/2018
casagrand

 

காஸா கிராண்ட் நிறுவனங்களுக்கு கட்டிட அனுமதி வழங்கியதில் தொடர்புடைய அதிகாரிகள் அதற்கான தகுந்த விளக்கங்களுடன் தனித்தனியாக பிரமானப்பத்திரம் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் குமுதா என்பவர் தாக்கல் செய்த மனுவில், அனகாபுத்தூர் மூகாம்பிகை நகரில் பல ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்டவர்கள் வீடுகள் கட்டி வசித்தவர்களை போலீஸ் துணையுடன் வெளியேற்றியதை ரத்து செய்ய கோரியிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது,  ’’சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலத்துக்கு அருகில் அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து காஸா கிராண்ட் என்ற கட்டுமான நிறுவனம் 26 குடியிருப்புகள் அடங்கிய 16 மாடி கட்டடம் கட்டப்படுவது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது தாக்கல் செய்யப்பட்ட புகைப்படங்களைப் பார்த்த நீதிபதிகள், மௌலிவாக்கம் சம்பவத்தில் இருந்து அதிகாரிகள் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டி, அனுமதி அளித்த அதிகாரி ஆஜராக உத்தரவிட்டனர்.

 

அதன்படி இன்று, நீர்வள ஆதாரத் துறை தலைமை பொறியாளராக இருந்து ஓய்வுபெற்ற பக்தவச்சலம் நீதிபதி முன்னால் ஆஜரானார். அப்போது நீதிபதிகள், வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ள இடத்தில் எப்படி 11 மாடி கட்டிடத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அதிகாரி, 6 அடி அளவில் கட்டுமான நிறுவனம் சுவர் எழுப்பியுள்ளதாக தெரிவித்தார்.


இந்த பதிலை கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதிகள், தெற்கு கரையை உயர்த்தினால் வடக்கு கரைப்பக்கம் தானே தண்ணீர் ஏறும் என கேள்வி எழுப்பியதுடன், கரையில் எப்படி கட்டுமானத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது எனவும் கேள்வி எழுப்பினர்.

 

அதற்கு சைதாப்பேட்டை பகுதியில் அடையாற்றில் கரையே இல்லை என தாசில்தார் அளித்த பதிலால் அதிர்ந்த நீதிபதிகள், கரையே இல்லாத ஆறா? என ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

 

2015ல் 10 நாள் இடைவெளியில் காஸா கிராண்ட் நிறுவனம் பல அனுமதி வாங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்ததால், அதற்கு அனுமதி அளித்த அதிகாரிகள் தனித்தனியாக பிரமானபத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நீதிபதி ஜூலை 24க்கு ஒத்திவைத்தனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

உயர்மட்ட மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்த முதல்வர்!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
The CM started the construction of the high-level flyover

சென்னை சைதாப்பேட்டையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (19.1.2024) அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3.20 கி.மீ நீளத்திற்கு கட்டப்படவுள்ள நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் 2022-23 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், சென்னை அண்ணா சாலையில், 5 குறுக்கு சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்டச் சாலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு பாலத்தின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் இரும்பினால் ஆன முன்வார்க்கப்பட்ட கட்டமைப்பு உபகரணங்களைக் கொண்டும், மண்ணின் தாங்கு திறனை நவீன தொழில்நுட்பத்தை கொண்டு மேம்படுத்தி அடித்தளம் அமைக்கும் வகையிலும், வடிவமைக்கப்பட்டு கட்டுமான பணிகளை 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள இறுதி செய்யப்பட்டது.

மேலும் மெட்ரோ ரயில் சுரங்கங்கள் அமைந்துள்ள நேர்பாட்டில் கட்டப்படும் முதல் உயர்மட்ட சாலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உயர்மட்ட சாலையின் மூலம் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.5 கி.மீ தூரத்தை 3 முதல் 5 நிமிடத்திலேயே கடந்து செல்லலாம். மேலும் கட்டுமானம் நிறைவடையும்போது சென்னை மாநகரின் மிக நீண்ட பாலமாக இப்பாலம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது எனவும் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

The CM started the construction of the high-level flyover

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னை துணை மேயர் மு. மகேஷ் குமார், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.பிரதீப் யாதவ், தலைமை பொறியாளர் (சுட்டுமானம் மற்றும் பராமரிப்பு) திரு.ஆர்.சந்திரசேகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

காலை உணவுத் திட்டம்; சைதாப்பேட்டையில் தொடங்கி வைத்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் (படங்கள்)

Published on 25/08/2023 | Edited on 25/08/2023

 

காலை உணவுத் திட்டத்தை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டத்தை நாகை மாவட்டம் திருக்குவளையில் கலைஞர் படித்த அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை அந்தந்த தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் தொடங்கி வைக்குமாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைத்துக் கட்சிகள் கொண்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சில தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார்.

 

அந்த அடிப்படையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாந்தோப்பு அரசுப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மா. சுப்பிரமணியன் காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். அவருடன் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், சென்னை மாநகர துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.