Skip to main content

வட்டாட்சியர் அலுவலகம் வெளியே நெல் மூட்டைகளை அடுக்கிவைத்த விவசாயி..!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

The village governor who ran away due to the innovative act of a farmer

 

அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பதற்கு சிட்டா அடங்கல் வழங்காத கிராம நிர்வாக அலுவலரைக் கண்டித்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் நெல் மூட்டையை அடுக்கி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கண்கொடுத்தவனிதம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைவேந்தன். இவர் ஐந்து நாட்களுக்கு முன்பு தனது வயலில் அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பதற்காக, கிராம நிர்வாக அலுவலர் சிவசண்முகம் என்பவரிடம் சிட்டா அடங்கல் கேட்டுள்ளார்.

 

The village governor who ran away due to the innovative act of a farmer

 

விவசாயி கலைவேந்தனுக்கு கிராம நிர்வாக அலுவலர் சிட்டா அடங்கல் வழங்காமல் மூன்று நாட்களாக அலைக்கழித்துள்ளார். மூன்று நாட்களாக நடையாக நடந்து ஆத்திரம் அடைந்த விவசாயி, நெல் மூட்டைகளை வாடகை டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாசலில் அடுக்கி வைத்துவிட்டு சென்றுவிட்டார். வட்டாச்சியர் அலுவலகத்தில் நெல்மூட்டைகள் அடுக்கியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

தகவல் அறிந்து அங்குவந்த வட்டாட்சியர், விவசாயிக்கு உடனே சிட்டா அடங்கலை வழங்குவதாக உத்தரவு அளித்தார். சிட்டா அடங்கலைக் கையோடு பெற்ற விவசாயி நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்றுள்ளார். விவசாயி ஒருவரின் நூதன போராட்டம் பரபரப்பை உண்டாக்கியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.