Skip to main content

உணவகத்தில் பார்சல் வாங்க வந்த பெண்ணுக்கு நேர்ந்த அத்துமீறல்... சிசிடிவியால் சிக்கிய போதை மாணவர்கள்!!

Published on 10/10/2021 | Edited on 12/10/2021

 

incident sivakangai... cctv footage... police investigation

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கஞ்சா போதையில் பெண்ணிடம் அத்துமீறி தகராறில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அழகப்பா பல்கலை பல்கலைக்கழகத்தில் பி.காம் படித்துவரும் அசோக் கோபிநாத் என்ற மாணவன், அவர் வாங்கிய புது இருசக்கர வாகனத்திற்காக அவரது நண்பர்களுக்கு விருந்து அளித்துள்ளான். அவருடைய நண்பர்களுக்கு மது வாங்கி கொடுத்த கோபிநாத், அதன் பிறகு அவர்களைச் சாப்பிடுவதற்காக ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளான். அப்பொழுது அதே உணவகத்திற்கு உணவு பார்சல் வாங்கப் பெண் ஒருவர் அவரது கணவருடன் வந்திருந்தார். கணவர் ஹோட்டலின் உள்ளே உணவு பார்சல் வாங்கக் காத்திருந்த நிலையில் இளம்பெண் கடையின் வாசலிலேயே கணவருக்காக காத்திருந்தார். அப்போது அங்கு போதையில் வந்த அழகப்பா கல்லூரி மாணவர்களில் ஒருவனான முகமது சல்மான் என்பவன் போதையில் தள்ளாடியபடியே ஹோட்டலுக்குள் நுழையும்போது வெளியில் நின்ற அந்த இளம்பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான். அவரது தலையிலிருந்த பூவை கைகளால் இழுத்துவிட்டுச் சென்றுவிட்டான். இதனால் பதறிப்போன அந்த இளம்பெண் ஹோட்டலுக்குள் சென்று பார்சலுக்காக காத்திருந்த கணவரிடம் அமர்ந்துகொண்டார். அதன் பின்னரும் விடாத முகமது சல்மான் என்ற அந்த மாணவன் ஆபாச சைகை காண்பித்து அழைத்துள்ளான். இதனையடுத்து அப்பெண்ணின் கணவர் அவருக்குத் தெரிந்த நபருக்கு தொலைப்பேசியின் மூலம் தகவலளித்துள்ளார்.

 

இதனைத் தெரிந்து கொண்ட முகமது சல்மான் அந்த பெண்ணின் கணவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்க முயல, பெண்ணின் கணவரும் அவனை எச்சரித்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கஞ்சா போதையிலிருந்த கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு இளம்பெண்ணின் கணவரைக் கடுமையாகத் தாக்கினர். ஹோட்டலில் இருந்த ஊழியர்கள் தடுக்க முயன்ற போதிலும் அவர்கள் கஞ்சா போதையிலிருந்ததால் கடுமையாகத் தாக்கத் துவங்கினர். அந்த இளம்பெண் அங்கிருந்த ஊழியர்களிடம் சண்டையை விலக்கி விடுமாறு கதறி அழுதும் யாரும் பெரிதாகத் தடுக்க முன்வரவில்லை.

 

CCTV

 

 

இந்த காட்சிகள் அனைத்தும் ஹோட்டலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த சம்பவம் குறித்து வெளியே தெரிய வேண்டாம் எனத் தம்பதியினர் விட்டுவிட்ட நிலையில், ஹோட்டல் கடைக்காரர்களும் நமக்கு எதற்கு வம்பு என்று போலீசாரிடம் புகார் அளிக்காமல் விட்டுவிட்டனர். ஆனால் ஹோட்டலில் நடைபெற்ற சண்டையின்போது 2 செல்போன்களை மாணவர்கள் தவறவிட்டுள்ளனர். இதனையடுத்து செல்போனை ஹோட்டல் கடை உரிமையாளரிடம் இருந்து மீட்டுத் தருமாறு மாணவர்கள் அழகாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் விசாரிக்கையில் ஹோட்டலில் நடந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. போதை மாணவர்கள் முகமது சல்மான், அசோக் கோபிநாத், ஹரிகரன், அஸ்வின் ஆகிய 6 பேரைக் கைது செய்த போலீசார், மேலும் 7 பேரை இது தொடர்பாகத் தேடி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.