Skip to main content

கணவருடன் தகராறு; 3 வயது மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு இளம்பெண் தற்கொலை!

Published on 26/03/2021 | Edited on 26/03/2021

 

incident in salem panamarathupatti

 

சேலம் அருகே, கணவருடன் ஏற்பட்ட தகராறால் விரக்தி அடைந்த இளம்பெண், தனது மூன்று வயது மகனுக்குப் பூச்சி மருந்து கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

 

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள கம்மாளப்பட்டி வடக்கு காடு பகுதியைச் சேர்ந்தவர் கந்தன். இவருடைய மகன் முத்துக்குமார் (25). வெல்டிங் தொழிலாளி.

 

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலத்தில் வேலை செய்தார். அப்போது அங்கு ஸ்டெபியா (24) என்ற இளம்பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு காதல் மனைவியுடன் முத்துக்குமார் சொந்த ஊருக்கே வந்துவிட்டார். இவர்களுக்கு 3 வயதில் அஜித் என்ற ஆண் குழந்தை உள்ளது.

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஸ்டெபியாவுக்கு லேசாக மனநலம் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. திடீர் திடீரென்று சம்பந்தமே இல்லாமல் கோபப்படும் அவர், அடிக்கடி மாமியார், கணவர் ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் அனைவரும் நிம்மதி இழந்து இருந்தனர்.

 

இந்நிலையில், புதன்கிழமை (மார்ச் 24) இரவு ஸ்டெபியா, கணவரின் தம்பி ஜெயக்குமார் (10) என்ற சிறுவனை திடீரென்று தாக்கியுள்ளார். இரவு வீடு திரும்பிய முத்துக்குமாரிடம் இதுகுறித்து ஜெயக்குமார் கூற, கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

 

கணவருடன் ஏற்பட்ட கோபத்தால் இரவு சாப்பிடாமலேயே ஸ்டெபியா தூங்கச் சென்றுவிட்டார். திடீரென்று நள்ளிரவில் எழுந்த முத்துக்குமார், படுக்கையில் மனைவியையும், குழந்தையையும் காணாமல் போனதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள் சிலரை அழைத்துக்கொண்டு அவர்களைத் தேடிச்சென்றார்.

 

வீட்டில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் மகன் அஜித், ஒரு பாறையில் சடலமாக கிடப்பது தெரிய வந்தது. அங்கிருந்து சிறிது தொலைவில் ஸ்டெபியாவும் இறந்து கிடந்தார்.

 

இதுகுறித்து பனமரத்துப்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். உடற்கூராய்வுக்காக சடலங்களை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இரவில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் விரக்தி அடைந்த ஸ்டெபியா தற்கொலை செய்ய முடிவெடுத்ததும், வீட்டில் பூச்செடிக்குத் தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து முதலில் குழந்தைக்குக் கொடுத்து கொன்றுவிட்டு, பிறகு அவரும் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

 

திருமணம் ஆன நான்கு ஆண்டில் இளம்பெண் இறந்திருப்பதால் சேலம் வருவாய் கோட்டாட்சியர் மாறன் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். கேரளாவில் உள்ள ஸ்டெபியாவின் பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. குழந்தையைக் கொன்றுவிட்டு, தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கம்மாளப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.