Skip to main content

திமுக வேனில் சென்று அதிமுகவிற்கு வாக்களித்து துணை சேர்மன் ஆன காங்கிரஸ் வேட்பாளர்!

Published on 11/01/2020 | Edited on 11/01/2020

புதுக்கோட்டை மாவட்டக்குழு தலைவர் பதவிக்கு 13 இடங்களில் வெற்றிபெற்றுள்ள தி.மு.க கூட்டணிதான் வெற்றி பெறும் என்று அனைவரின் எதிர்பார்ப்பு இருந்தது. ஏனென்றால் ஆளும் அதிமுக 9 இடங்களை மட்டுமே பிடித்திருந்ததால் அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்ற நிலையில் திமுக தில்லாக இருந்தது.

திமுக மாவட்ட சேர்மன் வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியான நிலையில் கலைவாணி சுப்பிரமணியன் வேட்பாளராக திமுக கட்சி அறிவித்தது.

 

pudukottai


காலை தலைவர் தேர்தலுக்கு 11 திமுக கவுன்சிலர்கள், 2 காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஒரு வேனில் மொத்தமாக வந்து இறங்கி உள்ளே சென்றனர். அதேபோல அதிமுக தரப்பில் 8 அதிமுக கவுன்சிலர்கள் ஒரு த.மா.கா கவுன்சிலர் என 9 பேர் ஒன்றாக வந்தனர். திமுக சார்பில் கலைவாணியும், அதிமுக சார்பில் ஜெயலெட்சுமியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

வாக்கெடுப்பு முடிந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 9 வாக்குகளுடன் இருந்த அதிமுக கூட்டணி வேட்பாளர் ஜெயலெட்சுமி 12 வாக்குகளும், 13 வாக்குகள் வைத்திருந்த திமுக கலைவாணி 10 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
குறைவான வாக்குகள் இருந்த அதிமுக மாவட்டசேர்மன் பதவியை பிடித்தது.

 

pudukottai


மாலையைில் அதேபோல துணைத் தலைவர் தேர்தல் நடந்த போதும் ஒன்றாகவே வந்தனர். திமுக சார்பில் துணைத் தலைவருக்கும் சேர்மன் வேட்பாளராக போட்டியிட்ட கலைவாணியே மனு தாக்கல் செய்ய.. அடுத்த நிமிடம் திமுக கூட்டணி கவுன்சிலர்களுடன் வந்த காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் உமாமகேஸ்வரியும் வேட்பாளராக மனுத்தாக்கல் செய்த போது திமுகவினருக்கு அதிர்ச்சி. வாக்குப்பதிவு முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டபோது 11 – 11 என சமநிலை வந்தது. 

குலுக்கல் முறையில் காங்கிரஸ் கட்சியின் உமாமகேஸ்வரி துணைத் தலைவர் ஆனார். திமுகவில் தொடர்ந்து மாவட்டத் துணைத்தலைவர் பதவி கேட்டும் கொடுக்க மறுத்துவிட்டனர். அதேபோல திருவரங்குளம் ஒன்றியத்தில் அதிக இடங்களை வென்று கொடுத்த ஒ.செ. தரப்பை வேட்பாளர் ஆக்காமல் தி.மு.க மாவட்ட நிர்வாகம் ஒருதலைப் பட்சமாக வேட்பாளர் ஆக்கியதால் காங்கிரஸ் உமாமகேஸ்வரி தரப்பிற்கு திமுக மீது கடும் கோபம். தாங்கள் சார்ந்துள்ள இனத்திற்கு திமுக தொடர்ந்து துரோகம் செய்வதாக கூட்டணிக்குள் பேசிக் கொண்டனர்.

 

pudukottai


இதை அறிந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த நினைத்து காங்கிரஸ் கவுன்சிலர்களிடம் பேசியதுடன், ஒரு திமுக கவுன்சிலரையும் ரகசியமாக பேசி முடித்து வைத்துவிட்டு வேட்பாளரையும் தேர்வு செய்து அனுப்பி வைத்தார். சத்தமில்லாமல் திமுக வேனிலேயே சென்ற அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்ததுடன் அவர்கள் தயவில் துணைத் தலைவரும் ஆகிவிட்டார் காங்கிரஸ் உமா மகேஸ்வரி. வெற்றிக்கு பிறகு அதிமுகவினருடன் சென்று தலைவர்கள் சிலைகளுக்கும் மாலை அணிவித்தனர்.

இதை அரசியலில் மாற்றங்கள் எப்படி வேண்டுமானாலும் நிகழும் என்று சொல்லிவிட்டு செல்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். 

 

 

சார்ந்த செய்திகள்