Skip to main content

விவசாயிகளை காப்பாற்ற முடியவில்லை என்றால் நஷ்டஈடாவது கொடுங்க.. அய்யாக்கண்ணு

Published on 06/09/2018 | Edited on 07/09/2018
ay

 

திருச்சி முக்கொம்புவில் உடைந்த அணையை சீரமைக்கும் பணி நடைபெறவதை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு நேரில் சென்று பார்த்து, பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளிடம் பணியின் துரித தன்மையை கேட்டறிந்தார்.

 

அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசும் போது.. 

’’மத்தவுங்களுக்கு வெள்ளம் வந்தாலும் பிரச்சனை இல்ல… மாவட்ட ஆட்சித்தலைவர் நாளைக்கு தண்ணீ தருவேன்னு சொன்னாங்க, இதுவரைக்கும் விடவில்லை. எங்களை காப்பாற்ற முடியவில்லை என்றால் நஷ்டஈடாவது ஏக்கருக்கு 30,000 கொடுக்க வேண்டும். இப்ப வரைக்கும் தண்ணீரை அடைக்க முடியாமல் தண்ணீர் தற்போது வரை விரையமாகி கொண்டே இருக்கிறது. இன்னும் கடைமடைகளுக்கு தண்ணீர் வரவில்லை. இன்னைக்கு அடைத்து விடுவோம் என்கிறார்கள் எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. 

 

ஆனால் அதிகாரிகள் இன்று அடைத்து விடுவோம் என்கிறார்கள். நாளைக்கு மதியம் கடைமடைகளுக்கு தண்ணீர் விடுவோம் என்று சொல்றாங்க, அன்னைக்கு கூட முதல்அமைச்சர் நாலு நாளில் வேலை முடிந்துவிடும் சொன்னாங்க, ஆனா இப்ப வரைக்கும் முடியல இது முடியவில்லை என்றால் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். 


இப்போ போட்டுக்கொண்டிருக்கிற அடைப்பு தற்காலிகமானது. தான் 3 மாதத்திற்குள் நிரந்தர பாலம் அமைத்து விட வேண்டும். அதுவும் வடகிழக்கு பருவமழை பெய்ய ஆரம்பிப்பதற்குள் கட்டி முடித்து விட வேண்டும் . செய்வார்கள் என்று நம்புவோம் என்றார். 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

“முதல்வர் ஸ்டாலின் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்” -  அய்யாக்கண்ணு

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Ayyakannu said that Cm Stalin should fast for kaveri issue  

 

திருச்சி மற்றும் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களின் குறைகளை கோரிக்கைகளாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனுவாக இன்று அளித்தனர். இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட பல விவசாயிகள் மீது பொய் வழக்கு போடப்பட்டதை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து, காவல்துறையினரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் மாவட்ட வருவாய் துறை அலுவலர் அபிராமி பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். இது குறித்து விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், “காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பது கிடையாது. இதனால் காவேரி டெல்டா விவசாயிகளை காப்பாற்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் அல்லது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஒரு லட்சம் கோடி நஷ்ட ஈடு வாங்கி காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.

 

கடந்த 2021-ம் ஆண்டு குழுமணியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிக்கு நியாயம் கேட்டு 24 விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து திருச்சி அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத் தலைவராகிய என் மீது 6 வழக்குகளும், என் சங்கத்தை சார்ந்த விவசாயிகள் மீது பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

குறிப்பாக, திருவண்ணாமலை விவசாயிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் போட்டதை போல என் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடுவதற்காக காவல்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு காரணமான திருச்சி மாவட்ட துணை கமிஷனர் அன்பு மற்றும் காவல்துறையினரை கண்டிக்கின்றோம்” என்றார்.