Skip to main content

நான் நினைத்திருந்தால் 2001லேயே முதலமைச்சர் ஆகியிருப்பேன் - டி.டி.வி. தினகரன்

Published on 09/07/2018 | Edited on 09/07/2018

கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற அமமுக பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் மேடையில் உரை ஏற்றினார். 

 

அப்போது பேசிய அவர், 

கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் கோட்டை, அதனால் தான் அதிக அமைச்சர்களை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கியதாக தெரிவித்தார். எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு அவரது மனைவி ஜானகியால் ஆட்சியை காப்பாற்ற முடியவில்லை. ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவினால் தான் இந்த ஆட்சி தொடர்ந்து வருவதாக கூறினார். எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதா கூட அமைச்சராக தான் ஆக்கினார், ஆனால் முதலமைச்சராக்கிய சசிகலாவை கட்சியை விட்டு நீக்கினார் எனவும், ஆயிரம் தினகரன் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற முதலமைச்சர் பேச்சை குறிப்பிட்ட டிடிவி தினகரன், இந்த ஒரு தினகரனையே ஆர்.கே.நகரில் எதிர்கொள்ள முடியவில்லை எனவும் சுட்டிக் காட்டினார். இரட்டை இலை சின்னம், ஆட்சி அதிகாரம் இருந்தும் 150 கோடி செலவு செய்தும் என்னை வெற்றி பெற முடியவில்லை எனவும், நான் புறவழியில் வந்தவன் அல்ல,  ஜெயலலிதாவினால் அறிமுகப்படுத்தப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவன் என தெரிவித்தார்.
 

ஜெயலலிதாவிற்கு குடும்பம் இல்லை என்ற காரணத்தினால், சசிகலா குடும்பத்தை சேர்ந்த என்னை அரசியலுக்கு வரவழைத்தார் என்றும் திருப்பூரில் இருந்து கட்சி துணிகளை எடுத்து கொண்டு என் வீட்டில் வந்து நின்றவர் தான் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என தெரிவித்தார். இந்த படம் என்னிடம் இன்றும் உள்ளது, வேண்டுமென்றால் வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வைக்கிறேன். சாக்கடை சுத்தம் செய்ய வேண்டிய அமைச்சர் சாக்கடை போல பேசுகிறார் என புகார் கூறினார். துரோகம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. மடியில் கனம் இருந்ததால் டெல்லிக்கு பயந்து கொண்டு என்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள் என தினகரன் குற்றம்சாட்டினார். 2014 ல் ஜெயலலிதா கூட்டணிக்கு வராததால் பாஜக பழி வாங்குவதாகவும், என்னை கட்சியில் இருந்து வெளியேற சொன்னவர்கள், அரசியலில் இருந்து வெளியாறுவார்கள் என தெரிவித்தார். 

 

If I had thought, I would have been chief minister in 2001


 

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், 

நான் நினைத்திருந்தால் 2001 லேயே முதலமைச்சராக ஆகியிருக்கலாம் என கூறியவர் நான் புறவழியில் வர விரும்புபவன் அல்ல எனவும் 234 தொகுதியிலும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வேன். இல்லையேல் உங்களில் ஒருவனாக பணியாற்றுவேன் எனவும் ஆனால் பதவிக்காக யார் காலிலும் விழமாட்டேன்.
 

 

 


பணம் கொடுத்தோ, பிரியாணியோ, முட்டை கொடுத்தோ, மது கொடுத்தோ கூட்டத்தை சேர்க்கவில்லை. தற்போது திருச்செங்கோட்டிலும், ராசிபுரத்திலும் ரெய்டு துவங்கிவிட்டதாகவும் முட்டை வடிவத்தில் ஆளும் அரசுக்கு அணுகுண்டு வந்துள்ளதாகவும், விரைவில் தமிழக அமைச்சர்கள் சிறை செல்வார்கள் என விமர்சனம் செய்தார்.

 

 


நீதிமன்றத்தில் ஆகஸ்ட் மாதத்தில் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும், அதன் பின் சட்டமன்றத்தை காலி செய்ய வேண்டியிருக்கும். மக்கள் விரும்பாத திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் திணிக்க முயன்றால், மக்களுடன் இணைந்து அமமுக போராடும் என தெரிவித்தார். பன்னீர்செல்வம் மகன், பி.ஹெச் பாண்டியன் மகன் கட்சி பொறுப்புகளில் உள்ளனர், ஆனால் எங்களை குடும்ப ஆட்சி என்கின்றனர். தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பிற்கு பின் அமமுக 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கூறினார். 234 தொகுதிகளும் ஆர்.கே.நகர் தொகுதி போல் மீண்டும் குக்கர் சின்னத்தில் நின்று வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.