Skip to main content

'கஜா' புயல் காலத்தில் கரண்ட் ஆகவும், 'கரோனா' காலத்தில் மருந்தாகவும் இருந்தேன் - அமைச்சர் விஜயபாஸ்கர்!

Published on 25/03/2021 | Edited on 25/03/2021

 

j

 

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தும் முடிந்து சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

 

அமைச்சர்கள் தங்களது தொகுதியில் தீயாக வேலை செய்துவருகிறார்கள். அந்த வகையில் விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரச்சாரத்தில் தனக்கு 'சுகர்' இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்த நிலையில், இன்று, "கஜா புயல் காலத்தில் கரண்ட் ஆகவும், கரோனா காலத்தில் மருந்தாகவும் மக்களுக்கு உதவி செய்தேன்" என்று தெரிவித்தது, அங்கு கூடியிருந்த மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

 

 

 

சார்ந்த செய்திகள்