Skip to main content

இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போருக்கான தேர்தல் நடைபெறுகிறது! ஐ.பெரியசாமி பேச்சு!!

Published on 23/03/2019 | Edited on 23/03/2019

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் ப.வேலுச்சாமியை ஆதரித்தும், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும்  சௌந்திரபாண்டியனை ஆதரித்தும் செம்பட்டியில் உள்ள சந்தை திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க.உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி தலைமைதாங்கினார். ரெட்டியார்சத்திர தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், பகுத்தறிவாளருமான ப..கசிவகுருசாமி வரவேற்புரை ஆற்றினார்.

 

dmk

 

இக்கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் பேசும்போது, 1972ம் ஆண்டு முதல் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக இம்முறை கூட்டணி கட்சிக்கு விட்டுக் கொடுத்தது தோல்வி பயத்தில்தான் என்றார். திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அண்ணன் ப.வேலுச்சாமி அவர்கள் 2 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார். அவரை அடுத்து பேசிய திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான அர.சக்கரபாணி பேசும்போது, 2016ம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் அண்ணன் ஐ.பெரியசாமி அவர்களை எதிர்த்து அதிமுக சார்பாக பண பலத்துடன் போட்டியிட்ட நத்தம் விசுவநாதன் ஆத்தூர் தொகுதியின் செல்லப்பிள்ளை அண்ணன் ஐ.பெரியசாமியின் மீது  தொகுதி மக்கள் வைத்திருந்த பாசத்தால்  அமோக வெற்றி பெற்றார். அதுபோல இன்று திமுக சார்பாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ப.வேலுச்சாமி அவர்கள் அமோக வெற்றி பெறுவார் என்று கூறினார்.

 

dmk

 

இறுதியாக பேசியாக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமியோ... நடைபெறும் திமுக செயல்வீரர்கள் கூட்டம் கூட்டமா? மாநாடா? என்ற அளவிற்கு மக்கள் நிறைந்துள்ளார்கள். காரணம் மோடியின் ஆட்சி மீது உள்ள வெறுப்பு தான் என்றார். இந்தியா முழுவதும் தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்திற்கான தேர்தல் இது என்றார். மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்ட நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். 

 

மக்களாட்சிக்காக மக்கள் நலனுக்காக காங்கிரஸ் பேரியக்க தலைவர் ராகுல்காந்தி போராடி வருகிறார். ஆனால் மோடியோ இந்தியாவின் நான்கு பணக்கார முதலைகளை காப்பாற்ற போராடி வருகிறார். புல்வாமா தாக்குதலின் போது மிக் ரக விமானங்களை அனுப்பியபோது நமது இராணுவவீரர் அபிநந்தன் எதிரிகளிடம் பிடிபட்டார். நான் கேட்பது பயன்படுத்த முடியாத மிக் ரக விமானத்தை அனுப்பியது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார். ரபேல் விமான பேர ஊழலில் மோடி அவர்கள் சம்மந்தப்பட்டு இருப்பதால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். இதுபோல தமிழகத்தில் உள்ள முதலமைச்சர் முதற்கொண்டு அனைத்து அமைச்சர்களும் விசாரணை வளையத்தில் வருவது உறுதி. நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும் ஒவ்வொரு வாக்கும் உங்கள் குடும்பத்தை காப்பாற்றும். உங்கள் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் உங்கள் வீட்டில் உள்ள முதியோர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கும் உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்கும். திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி திமுக சார்பாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ப.வேலுச்சாமி அவர்களின் சிறந்த வேட்பாளர். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள் என்றார். 

 

 

 

இக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்டத்தலைவர் எஸ்.அப்துல்கனிராஜா, மாநகர தலைவர் எம்.சொக்கலிங்கம், மதிமுகமாவட்ட செயலாளர் எம்.செல்வராகவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சச்சிதானந்தம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் எ.பி.மணிகண்டன், திராவிடர் கழகத்தை சேர்ந்த இரா.வீரபாண்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வ.அன்பரசு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த இ.எ.அல்தாப்உசேன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் எம். ரஹமத்துல்லா, மனித நேய மக்கள் கட்சி சேர்ந்த பழனி எம்.ஐ.பாரூக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் பி.அருள், அகில இந்திய பார்வர்டு ப்ளாக் மாநில செயலாளர் எம்.பசும்பொன்ராஜா, பார்வர்டு பிளாக் எஸ்.டி. மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராமன், ஆதிதமிழர் பேரவை மாவட்;ட செயலாளர் பி.காளிராஜ், மனிதநேய ஜனநாயக  கட்சி மாவட்ட செயலாளர் எ.அப்துல்காதர் ஜெய்லானி, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் எம்.ஆண்டிச்சாமி மற்றும் ஒட்டன்சத்திரம் நகரசெயலாளர் வெள்ளைச்சாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர்கள் ஆ.நாகராஜ், தண்டபாணி, மார்கிரேட் மேரி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் மோகன், திண்டுக்கல் ஒன்றிய திமுக செயலாளர் நெடுஞ்செழியன், ரெட்டியார்சத்திரம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கு.சத்தியமூர்த்தி, மாவட்;ட தொண்டரணி துணைச் செயலாளர் கும்மம்பட்டி விவேகானந்தன், நகர கழக செயலாளர்கள் சின்னாளபட்டி தி.கோபி, சித்தையன்கோட்டை சக்திவேல், அய்யம்பாளையம் அய்யப்பன், கன்னிவாடி பேரூர் கழக செயலாளர் வழக்கறிஞர் சண்முகம், ஸ்ரீராமபுரம் பேரூர் கழக செயலாளர் ராஜா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆத்தூர் நடராஜன், நெல்லூர் மலைச்சாமி, அய்யம்பாளையம் ரமேஷ் மற்றும் தோழமை கட்சிகள், ஆதரவு இயக்க நிர்வாகிகள்,கழக செயல்வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆத்தூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சி.ராமன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ.முருகேசன், ரெட்டியார்சத்திர வடக்கு ஒன்றிய செயலாளர் சு.மணி ஆகியோர் நன்றி உரை கூறினார்கள்!.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்டினலை அடுத்த சோம்பன்; வாக்களிக்க வைத்த தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Somban next to Sentinel; The Election Commission held the vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 

தமிழகம் மட்டுமல்லாது அந்தமான் தீவிலும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. அதில் மிகவும் குறிப்பிடத் தகுந்த ஒன்றாக அந்தமான் தீவில் மிகவும் ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவது சென்டினல் மற்றும் சோம்பன் இன பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியாகும்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு அந்தமானில் வடக்கு சென்டினல் தீவு பகுதிக்குச் சென்ற 26 வயது மத போதகர் ஜான் ஆலன் சாவ் சென்டினல் பழங்குடியின மக்களால் அம்பு எய்து கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது .தற்போதுவரை அவரின் உடல் கண்டெடுக்கப்படவில்லை.  சென்டினல் மக்கள் வெளி உலகத் தொடர்புக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களை அணுகும் மக்களை அவர்கள் கொடூரமாக கொள்வது வழக்கம்.  வெளி உலக தொழில் நுட்பங்கள், வெளி மனிதர்களின் கலாச்சாரம் ஆகியவை எதுவும் தற்போது வரை சென்டினல் மக்களைச் சென்றடையவும் இல்லை. மீறி எடுத்துச் சென்றால் அந்த மக்கள் ஏற்றுக் கொள்ளவும் விரும்பவில்லை.

அடர்ந்த காட்டில் தனிமையாக வாழும்  அந்தப் பழங்குடியின மக்களின் மக்கள் தொகையே 80 தான் என்று சொல்லப்படுகிறது. சென்டினல் போன்றே அந்தமானில் மற்றொரு பழங்குடியின இனக்குழுவும் உள்ளது. அதன் பெயர் சோம்பன். இந்தக் குழுவில் மொத்தம் 229 பேர் வசிக்கின்றனர். இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம்  சோம்பன் மக்களிடம்  வாக்களிப்பதின்  அவசியத்தை  உணர்த்தியிருந்தனர். அவர்களுக்கு பயிற்சி கொடுத்து ஓட்டு போட வைக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்த நிலையில், 229 பேரில் ஏழு சோம்பன் பழங்குடியின மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்தனர். இதனை வரலாற்றுச் சாதனை என இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.