Skip to main content

நெல்மூட்டைகள் வரத்தால் போக்குவரத்து பாதிப்பு...

Published on 30/07/2020 | Edited on 30/07/2020

 

image

 

கடலூர் அருகே விருத்தாசலம் வேளாண் விற்பனை கூடத்திற்கு அதிக நெல் மூட்டைகள் வந்ததால்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ளது ஒழுங்குமுறை வேளாண் விற்பனைக் கூடம்.   மாவட்டத்திலேயே  மிகப் பெரிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடமான இங்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விருத்தாசலம், திட்டக்குடி, தொழுதூர்,  மங்கலம்பேட்டை, கம்மாபுரம், வேப்பூர் மட்டுமல்லாமல் அரியலூர், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் தாங்கள் விளைவிக்கும் நெல், உளுந்து, சோளம், கம்பு, எள், மணிலா உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை விற்பனைக்காகக் கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர்.  

 

அதிகப்படியான விவசாயப் பொருட்கள் இங்கு வருவதால் கூட்டத்தைக் குறைப்பதற்காக விவசாயிகளின் நலன் கருதி சம்பா மற்றும் குறுவை சாகுபடி காலங்களில் விவசாயிகளின் சாகுபடி மற்றும் அறுவடைை செய்யும் பகுதிகளிலேயே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்து வந்தது. இதனால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அதிக அளவு மூட்டைகள் வராத வண்ணம் சீராகக் கொள்முதல் நடந்து கொண்டிருந்தது. ஆனால் இந்த வருடத்திற்கான குறுவை நெல் சாகுபடி தொடங்கியும் விருத்தாசலம் வட்டாரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் பணி நடைபெறவில்லை. இதனால் விவசாயிகள் அதிகளவில் நெல்மூட்டைகளை விற்பனைக்காக ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கொண்டு வருகின்றனர். 

 

அதன்படி நேற்று முன்தினம்  விற்பனைக்காக குவிந்த 4 ஆயிரம் மூட்டைகள் விற்பனை செய்யாமல் குடோனிலேயே இருந்ததினால் வெளியிலிருந்து வரும் மூட்டைகளை உள்ளே அனுமதிக்காமல் சாலையிலேயே நிறுத்த அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த டிராக்டர்கள், லாரிகள் அனைத்தும் விருத்தாசலம்- கடலூர் நெடுஞ்சாலையில் இருபுறமும் வரிசையாக நின்றன. தொடர்ந்து இரவு ஏழு மணி ஆன போது வாகனங்கள் அதிகரித்து சாலைகளில் நின்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் வரிசைப்படி வாகனங்கள் நிற்காமல் ஒன்றுக்கொன்று இடித்தபடி சாலையின் நடுவிலேயே நின்றதால் போக்குவரத்து முழுவதும் தடை ஏற்பட்டது. 

 

image

 

இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் விரைந்து வந்து வாகனங்களை சரி செய்து பின்பு உள்ளே கொண்டு செல்ல உத்தரவிட்டனர். அப்போது விவசாயிகளுக்கும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 'மழை காலங்களில் நெல் மூட்டைகள் நனைந்து விடக்கூடிய சூழ்நிலையில் விவசாயிகள்  கொண்டு வந்த நெல் மூட்டைகளை உள்ளே கொண்டு செல்ல விடாமல் ஏன் வெளியில் நிறுத்தி வைக்கிறீர்கள்?' எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, காவலர்கள் ஒவ்வொன்றாக  வரிசைப்படுத்தி வாகனங்களை அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.