Skip to main content

பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக பொதுமக்களை தூண்டி விடுபவர்கள் தேசதுரோகிகள்: மாஃபா பாண்டியராஜன்!

Published on 22/06/2018 | Edited on 22/06/2018


பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக பொதுமக்களை தூண்டி விடுபவர்கள் தேசதுரோகிகள் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் காவிரி மீட்பு வெற்றி பொதுக் கூட்டம் கொருக்குப்பேட்டையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் கலந்து கொண்டார். பின்னர் கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,

பசுமை வழி சாலை திட்டம் மத்திய அரசிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி நிதி பெற்று செயல்படுத்தபடும் மிக பெரிய திட்டமாகும். இந்த திட்டம் மிக பெரிய பொருளாதார தாக்கத்தை உருவாக்கும். விவசாய நிலங்களை கையகப்படுத்தி திட்டத்தை செயல்படுத்துவது உண்மை இல்லை அவர்களை திசை திருப்பி தூண்டி விடுவது மிக பெரிய தேசதுரோகம்.

தினகரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் விரைவில் தீர்ப்பு வரும் ஆர்.கே நகரில் விரைவில் இடைதேர்தல் வரும். ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்று கொடுத்த வாக்குகுறுதிகளை நிறைவேற்றும். தினகரன் ஆர்.கே நகர் வருவதில்லை என்பதை விட கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இல்லை என்பதுதான் உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்