Skip to main content

’கம்யூனிஸ்ட் மவுத் பீசுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன்’ - ஈரோட்டில் ஹெச் ராசா காட்டம்

Published on 09/01/2019 | Edited on 09/01/2019
r


ஈரோட்டில் இன்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:    "திருவாருர் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தக்கூடாது என தேர்தலை நிறுத்த யாரோ ஒருவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் ஆஜராகிறார். ஆர்.கே.நகர் போல், திருவாரூரிலும் மூன்றாமிடத்துக்கு சென்று விடுவோம் என்ற பயத்தின் காரணமாக, திமுக தேர்தலை தள்ளி வைக்க அவர்களது கூட்டணிக்கட்சி மூலம் முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளனர்.

 

திமுகவை  ஸ்டாலின் சுயமாக வழிநடத்தவில்லை. அந்த கட்சியை  பிரிவினைவாத தீய சக்திகள் தான் வழிநடத்துகிறதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.


இலங்கையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட காரணமாக இருந்த சோனியா காந்தியை அழைத்து வந்து  கலைஞர் சிலையை  ஸ்டாலின்  திறந்துள்ளார்.
 


கேரளாவில் சபரிமலை பிரச்சினையில் வேண்டுமென்றே மிக மோசமாக பினராயி விஜயன் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் இறை நம்பிக்கையுள்ளவர்கள், ஐயப்பன் கோயிலுக்குச் செல்பவர்கள், மார்க்சிஸ்ட் கட்சியிடம்  உறவு வைத்துள்ள திமுகவை முழுமையாக புறக்கணிக்க வேண்டும்.

 

இந்து சமய அறநிலையத்துறை முழுமையாக ஊழல்மயமாகியுள்ளது.  உயர்நீதிமன்றத்தால் சிலைக்கடத்தல் பிரிவில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐஜி பொன் மாணிக்கவேலுவுக்குத் தேவையான அனைத்து வசதிதிகளையும் அரசு செய்து தர வேண்டும்.


ரபேல் விவகாரத்தில் எவ்வித தவறும் நடக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்த பிறகும், இது குறித்து பார்லிமெண்டில் பேசுவது அநாகரீகம். இந்த தீர்ப்புக்குப் பின் ரபேல் விவகாரத்தில் நான் தவறாகப் பேசிவிட்டேன் என்று ராகுல் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். 


அறிவியல் மாநாட்டில் மகாபாரதக் காலத்தில் சோதனைக்குழாய் குழந்தைகள் பிறந்துள்ளது என ஆந்திர துணைவேந்தர் கூறியுள்ளார். இதனை சர்ச்சைக்குள்ளாக்கக் கூடாது. மகாபாரதம் நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே, அந்த காலத்தில் இதுபோன்று இருந்திருக்காது என்று நாம் சொல்ல முடியாது. காந்தாரி கரு கலைந்து, அதனை நூறு ஜாடிகளில் வைத்திருந்துதான் நூறு குழந்தைகள் பிறந்ததாக மகாபாரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அது சோதனைக்குழாய் குழந்தை என்று சொன்னால், அது குறித்து ஆழமான ஆய்வினை ஏன் செய்யக்கூடாது? 

 

பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் என்று அதிமுக மிரட்டப்படுவதாக தமிழக முதல்வரோ, அதிமுக ஒருங்கிணைப்பாளரோ கூறவில்லை.   முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, மத்திய அரசுக்கு சட்டரீதியாக எந்த பொறுப்பும் இல்லை. மாநில அரசின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை நடந்தது. தற்போது அமைச்சர் - அரசு செயலர் இடையே சிகிச்சை தொடர்பாக முரண்பாடு இருக்குமாயின், அதற்கு ஆறுமுகசுவாமி கமிஷன் தான் விடை சொல்ல வேண்டும். அதுவரை காத்திருக்க வேண்டும். ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, வெளிப்படையாக என்ன நடந்தது என்பதைத் தெரிவித்து இருந்திருந்தால், இது போன்ற பிரச்சனைகள் வந்திருக்காது. 

 


தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஒரு நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்தபின், நிபந்தனையோடு ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என உத்தரவிட்டபின், அதனை செயல்பட அனுமதிக்க வேண்டும். எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி மீதான வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். 

 

தமிழகத்திற்கு பாதகம் செய்யும் எந்த திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வராது. அதனை அனுமதிக்கவும் செய்யாது. கேரளாவில் 800 கேவி உயர் மின் அழுத்த மின்சாரம் தரைவழியாக எடுத்துச் செல்லப்படவில்லை. இந்த விஷயத்தில் தமிழக விவசாயிகளிடம் பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்திற்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு நிலையான வருவாய் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்." என்றவரிடம் தீக்கதிர் நிருபர் ஒரு கேள்வி எழுப்ப கம்யூனிஸ்ட் பத்திரிகையா என காட்டமான ஹெச் ராசா " சீனாக்காரன் கம்யூனிஸ்ட் தாஸ் கேப்பிட்டல் தத்துவம் அந்நிய நாட்டு இறக்குமதி இந்து விரோதி அவனின் மவுத் பீசுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்"  என எரிச்சலுடன் எழுந்து சென்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“80 நாட்களுக்குள் அரை டஜன் அமைச்சராவது சிறைக்குப் போவார்கள்” - எச்.ராஜா

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
Within 80 days at least half of the ministry from DMK will go to jail says H. Raja

தமிழகத்தில், பா.ஜ., கட்சி மீது, போலீசாரைக் கொண்டு, தி.மு.க., திட்டமிட்ட பழி வாங்கும் போக்கை கடைபிடிக்கிறது. அரசியல் ரீதியாக ஹிந்து விரோத அரசாகத் தான் செயல்படுகின்றனர் என பாஜகவை சேர்ந்த எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழக அரசும், போலீசும் அரசியல் பாரபட்ச நடவடிக்கையைக் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் நிறுத்த வைப்போம். பாரபட்ச நடவடிக்கையை கண்டித்து, பா.ஜ., கட்சி போராட வேண்டியிருக்கும். தேசிய கட்சியான பா.ஜ.,வுக்கு கூட்டணி பற்றி ஒரு வழிமுறை உள்ளது. அகில இந்திய தலைமை தான், அதை பற்றி முடிவு செய்யும்.   இந்த நடிகர் அரசியலுக்கு வந்தார் எம்.ஜி.ஆர்., ஆனாரா? அந்த நடிகர் அரசியலுக்கு வந்தார் எம்.ஜி.ஆர்., ஆனாரா? என்றெல்லாம் கேட்டு, அதற்கு நான் ஏதாவது சொல்லி, அது வைரலாக்க வேண்டாம்.   அரசியல் கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய், அரசியல் நிலைப்பாடு எடுத்து, கருத்து சொல்லும் போது தான், சரியா, தவறா என்று அதைப் பற்றி சொல்ல முடியும்.

என்னுடைய கணிப்பு, வரும் 80 நாட்களுக்குள் அரை டஜன் அமைச்சராவது சிறைக்கு போவார்கள். அப்போது, அவர் சொல்லும் கருத்தை வைத்து, பேசிக் கொள்ளலாம்.   அரசியலை பொருத்தவரை, இவருக்கு ஓட்டுப் போடுங்கள், என்று எப்படி மறைமுகமாக சொல்ல முடியும்; அப்படி சொல்ல முடியாது.   புள்ளி வச்ச கூட்டணியில், ஒரு அங்கம் தானே மம்தா பேனர்ஜி. அதில் உள்ள முக்கிய புள்ளி, காங்கிரஸ் கட்சியால் 40 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது, என்று சொல்லி இருக்கிறார். லோக்சபா தேர்தலில், பா.ஜ.கட்சி 400 ப்ளஸ் தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெரும்.   ஒன்பது முறை முதல்வரான நிதிஷ்குமார், பெரும்பாலான காலகட்டத்தில், லல்லுவின் ‘ஜங்கல் ராஜ்’க்கு எதிராகத் தான் அரசியல் செய்திருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியினரிடம் சோதனை நடத்தியதில், துப்பாக்கி, வெடி பொருட்கள் போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறுகின்றனர். இது ஆபத்தான விஷயம். அதனால், அது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாருக்கு எதிராக பயன்படுத்த ஆயுதம் சேகரித்தனர், என்று தெரிய வேண்டியது அவசியம். சட்ட விரோத நடவடிக்கை எண்ணம் இல்லாமல், ஆயுதங்கள் சேகரிக்க மாட்டார்கள். அடிப்படை ஆதாரம் இல்லாமல், என்.ஐ.ஏ., சோதனை நடத்தாது.

தமிழக அரசியலில் வளரும் சக்தி பா.ஜ.கட்சி மட்டுமே. எதிர்காலத்தில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும். ஊழலும், உளறலும் மிகுந்திருப்பதால், தி.மு.க., அழியும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.   வரும் லோக்சபா தேர்தலில், கிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் மக்களை திரட்டுவதற்கு, பா.ஜ.கட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அரசியலில் பல்வேறு விதமான கணக்குகள் இருக்கிறது. தே.மு.தி.க.,வை பொருத்தவரை, அ.தி.மு.க., பக்கம் போனதாக உறுதியான தகவல் வரவில்லை.   அரசியலமைப்பு சட்டப்படி, மாநிலங்களில் கவர்னர் பதவி இருக்கும். முடிவு எடுக்கும் இடத்தில் இல்லாத விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை.

தமிழகத்தில், சமீப காலமாக போதைப் பொருட்கள் அதிகம் புழக்கத்துக்கு காரணம், நம் நாட்டுக்கு வெளியே பயங்கரவாத அமைப்புகளை கட்டமைக்க விரும்புவதாக செய்தி வந்துள்ளது. மிகக் குறைந்த அளவில் தான் போதை பொருட்கள் பிடிபடுகின்றன. அதற்கு, தேச விரோத நடவடிக்கைகள் கட்டமைப்படுவதே காரணம். நாம் தமிழர் மீதான நடவடிக்கை கூட அது தொடர்பானது தான்” இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Next Story

“தமிழக காவல்துறை நாம் தமிழர் கட்சியினர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? - ஹெச் ராஜா 

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
 H Raja questioned Tamil police, why have we not taken any action against Tamil party members yet

சென்னை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, கோவை, தென்காசி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் தேசியப் புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் நேற்று (02-02-24) சோதனையில் ஈடுபட்டனர். பிற நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பினர் ஊடுருவல் செய்தனரா எனவும், வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றனரா என்ற சந்தேகத்திலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் மூலம் என்ஐஏ அதிகாரிகள் தங்களுக்குத் தேவையான ஆவணங்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.

அந்த வகையில் திருச்சி சண்முகா நகரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் இருக்கும் சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு பெற்றிருந்தது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையின் போது சாட்டை துரைமுருகனின் மனைவி மாதரசியிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், பா.ஜ.க பிரமுகர் ஹெச்.ராஜா திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இல்லத்தில் NIA வந்து நடவடிக்கை மேற்கொள்ளும் வரை தமிழக காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது? நா.த.க நிர்வாகிகள் இல்லத்திலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வருகிறது. அவை யாருக்கு எதிராக பயன்படுத்த வைக்கப்பட்டிருந்தது என தெரிய வேண்டும். தமிழக காவல்துறை நாம் தமிழர் கட்சியினர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.