Skip to main content

உள்நோக்கத்தோடு பேசுகிறார் ஆளுநர்... பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குற்றச்சாட்டு!

Published on 06/05/2022 | Edited on 06/05/2022

 

Governor speaks with intent ... Popular Front of India

 

அரசியல் உள்நோக்கத்துடன் ஆளுநர் பேசுவதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு விமர்சித்துள்ளது.

 

சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று (06/05/2022) காலை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, "மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா எழுதிய 'THE LURKING HYDRA' என்ற புத்தகம் சிறந்த ஆவணமாக இருக்கும். இந்திய ராணுவத்தின் சிறப்பு குறித்த புத்தகம் எதுவும் இதுவரை இல்லாமல் இருந்தது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம். மனித உரிமை, அரசியல்- மாணவர் இயக்கம் போல முகமூடி அணிந்து இந்தியாவில் இயங்கி வருகின்றனர். நாட்டை சீர்குலைப்பதே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நோக்கம். பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயல்படுகிறது. 

 

அரசியல் லாபத்திற்காக வன்முறையைத் தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே. அரசியல் லாபத்துக்காக வன்முறையைத் தூண்டுவதை ஏற்க முடியாது. பயங்கரவாதத்தில் ஈடுபட்டால், அதற்கான பதிலடியை அவர்கள் பெறுவார்கள்" என்று கூறியிருந்தார்.

 

Governor speaks with intent ... Popular Front of India

 

தமிழக ஆளுநரின் இந்த கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு, 'அரசியல் உள்நோக்கத்துடன் பேசிவரும் ஆளுநர், தொடர்ந்து தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்று விமர்சித்துள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகி ஷேக் முகமது அன்சாரி, ''ஆளுநரின் பேச்சு தமிழக அரசுக்கு மேலும் ஒரு அவதூறை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு உடனே ஆளுநரை திரும்ப பெற வேண்டும்'' என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்