Skip to main content

பிரதமரை சந்திக்க தேதி கூட வாங்க முடியாத அரசாக உள்ளது தமிழக அரசு: திருநாவுக்கரசர்

Published on 23/04/2018 | Edited on 23/04/2018


பிரதமரை சந்திக்க தேதி கூட வாங்க முடியாத அரசாக உள்ளது தமிழக அரசு என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர்கள், மாநில துணை அமைப்புகளின் தலைவர்கள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜென்னீஸ் ஓட்டலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசும் போது..

காங்கிரஸ் கட்சியில் புதிதாக 32 லட்சம் உறுப்பினர் சேர்க்கை என்ற திட்டத்தை தேர்தல் நேரத்தில் தொடங்கினோம். அதை வருகிற ஜூலை 15-ந்தேதி காமராஜர் பிறந்த நாளுக்குள் 50 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தமிழ்நாடு முழுவதும் 60 ஆயிரம் பூத் கமிட்டிகள் உள்ளன. இதற்கு கிளைகள் தோறும் 25 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைத்து கட்சி பலப்படுத்தப்படும். இது முடிந்ததும் வருகிற ஜூலை மாதம் முதல் 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செல்கிறோம். அப்போது பொதுமக்களுடன் கலந்துரையாடலும், மாவட்ட தலைநகரங்களில் பொதுக்கூட்டமும் நடத்தப்படும்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு, தமிழகத்தில் அவருக்கு பிரமாண்டமான பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் ராகுல்காந்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். டெல்லியில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யக்கூடாது என வலியுறுத்தி, ராகுல்காந்தி தலைமையில் நடைபெறும் கருத்தரங்கத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் 500 தலித் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

இதேபோல் வருகிற 29-ந்தேதி பிரதமர் மோடியை கண்டித்து டெல்லியில் நடைபெறும் பேரணியில் ஏராளமானோர் பங்கேற்க உள்ளோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க தனது தோழமை கட்சிகளுடன் நடத்தும் மனித சங்கிலி போராட்டத்திலும் ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ளோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கக்கோரி துணை ஜனாதிபதியிடம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் புகார் மனு அளித்துள்ளனர். ஏற்கனவே அந்த தலைமை நீதிபதி மீது உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எதிர்காலத்தில் நீதிமன்றம் நடுநிலையோடு செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை முடிந்தும் தீர்ப்பு வழங்குவதில் காலதாமதம் ஆகிறது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் பல விஷயங்கள் காத்திருக்கின்றன. இந்த வழக்கில் நீதிமன்றம் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நாங்கள் நீதிமன்றத்துக்கு உத்தரவிட முடியாது. ஆனால் வேண்டுகோள் விடுக்கிறோம். இது மக்கள் விரும்பும் அரசு அல்ல. தீர்ப்பு வழங்க காலதாமதம் செய்யக்கூடாது.

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வழக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தை தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது. கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடத்தப்பட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். மணல் குவாரிகள் முறையாக திறக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும். மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டால் ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பயன்பெறும். இந்த திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலத்தில் காங்கிரஸ் கட்சியில் உள்ள காமராஜர் தொண்டர் ஒருவர் தமிழகத்தின் முதல்-அமைச்சராக வர வேண்டும். அதற்கு காங்கிரஸ் அடித்தளத்தை பலப்படுத்த வேண்டும். கட்சியில் கோஷ்டி பூசல் கிடையாது. தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியை காங்கிரஸ் கட்சி விரைவில் அமைக்கும்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தில் தி.மு.க. ஏன் கையெழுத்து இடவில்லை என்பதை தி.மு.க.விடம் தான் கேட்க வேண்டும். கூட்டணி என்பது சூழ்நிலையை பொறுத்து முடிவெடுக்கப்படும். தற்போது தி.மு.க.வுடன் தான் கூட்டணியில் இருக்கிறோம். தமிழகத்தில் பாடத்திட்டம் மாற்றும் வரை நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும். பிரதமர் மோடியை சந்திக்க தேதி கூட வாங்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் நேரம் கேட்டுள்ளோம். அதற்கு நேரம் தரவில்லையென்றால் பிரதமர் தமிழகத்திற்கு வரும் போது கருப்பு கொடி காட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.