Skip to main content

வீட்டில் கஞ்சா செடி, போதை ஸ்டாம்ப் - நான்கு பேர் கைது

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

Ganja plant at home, drug stamp - Four arrested in Chennai

 

சென்னையில் போதை ஸ்டாம்ப் வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

சென்னை மாடம்பாக்கத்தில் வீட்டில் கஞ்சா செடி வைத்திருந்ததோடு போதை ஸ்டாம்ப் வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது வீட்டில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டதும், போதை ஸ்டாம்ப் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக  சக்திவேல், சாம் சுந்தர், ஸ்ரீகாந்த், நரேந்திரகுமார் ஆகிய நான்கு பேரை கைது செய்த வடக்கு கடற்கரை போலீசார், அவர்களிடம் இருந்து 300 போதை ஸ்டாம்புகள் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்