Skip to main content

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாள்... 150-இடங்களில் காந்தியின் அஞ்சல் தலை கண்காட்சி

Published on 13/10/2018 | Edited on 13/10/2018
gandhi stamp exibition



மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் 150-இடங்களில் காந்தியின் அஞ்சல் தலை கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. 


புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள நகராட்சி உயர் தொடக்கப்பள்ளியில் இந்த தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் சிவசக்திவேல் தலைமை வகித்தார். தமிழாசிரியர் மீனாட்சி சுந்தரம் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வு பெற்ற அருங்காட்சியகக் காப்பாட்சியர் ஜெ.ராஜாமுகம்மது, சமூக ஆர்வலர் செல்வா ஆகியோர் கலந்து கொண்டனர். அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை நிறுவனர் வை.ந.தினகரன் கண்காட்சியைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.


இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளும் மகாத்மாக காந்தி படத்துடன் வெளியிட்ட 64 - அஞ்சல் தலைகளைக் காட்சிப்படுத்தியிருந்த நாணயவியல் கழகத் தலைவர் எஸ்.டி.பஷீர் அலி நம்நாட்டில் மகாத்மா காந்தி அவர்களை அறிந்து வைத்திருப்பதைக் காட்டிலும் மேலை நாடுகளில் அவரைப் பற்றி அறிந்தும் சிறப்புச் செய்தும் வைத்திருக்கிறார்கள். 


 

gandhi stamp exibition




அதனால் நம் நாட்டில் மட்டுமல்லாது மேலை நாடுகளிலும் அவருக்காக வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகளை ஏற்கனவே சேகரித்து வைத்திருந்தேன். என்னிடம் இதுவரை 64-வகையான அஞ்சல் தலைகள் உள்ளன. அண்ணல் காந்தியாரின் நினைவைப் போற்றும் வகையில் இந்த ஆண்டு பல இடங்களிலும் 150 - வது விழாக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக என்னால் இயன்ற வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் 150 இடங்களில் இந்த அஞ்சல்தலைகளை கண்காட்சியாக காட்சிப்படுத்தி மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறேன். அதன் முதல் நிகழ்ச்சியாக இந்தப் பள்ளியில் துவங்கியிருக்கிறேன். இந்த ஆண்டுக்குள் புதுக்கோட்டை மாவட்டத்தின் மற்ற இடங்களிலும் நடத்த  திட்டமிட்டிருக்கிறேன் என்றவர். மேலும் மற்ற மாவட்டங்களிலும் கண்காட்சி நடத்த பள்ளி கல்லூரிகள் கேட்டுக் கொண்டால் மாணவர்கள் மத்தியில் மகாத்மா காந்தி பற்றிய அஞ்சல் தலை கண்காட்சியை நடத்துவதுடன் மாணவர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தவும் உள்ளேன் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 உடல் உறுப்பு தானம்; கல்வி செலவை ஏற்ற அமைச்சர் காந்தி

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
Minister Gandhi bears the education expenses of the organ donor's children

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அவரைக்கரை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ருத்திரகோட்டி(42). கார் ஓட்டுநர். இவருக்கு திருமணம் ஆகி 3 பெண் பிள்ளை ஒரு ஆண்  பிள்ளை உள்ள நிலையில் இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து விட்டார் இவர், கடந்த சனிக்கிழமை அதிகாலை அவரைக்கரை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் சிஎம்சி ரத்தினகிரி வளாகத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து, ருத்திரகோட்டியின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்பேரில், அவரது இதயம், ஒரு சிறுநீரகம் ஆகியவை சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனைக்கும். கல்லீரல், மற்றொரு சிறுநீரகம் மற்றும் கார்னியா ஆகியவை சிஎம்சி மருத்துவமனைக்கும் தானமாக பெறப்பட்டு அங்கு தயார் நிலையில் இருந்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. 

Minister Gandhi bears the education expenses of the organ donor's children

மூளைச்சாவு அடைந்த ருத்திரகோட்டிக்கு அரசு மரியாதை செலுத்தும் வகையில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்மதி ஆகியோர் இறந்தவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பெரிய பெண் பிள்ளைக்கு ஐடிஐ அரசு கல்லூரியில் சேர்த்து விடுவதாகவும் மீதமுள்ள இரண்டு மற்றும் ஒரு ஆண் பிள்ளை ஆகியோரின் பள்ளி படிப்பு செலவை தானே ஏற்பதாக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

Next Story

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி காங்கிரஸ் சார்பில் மரியாதை (படங்கள்)

Published on 30/01/2024 | Edited on 30/01/2024

 

 

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி இன்று (30-01-24) சென்னை சத்தியமூர்த்தி பவனில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை செய்தார். இதனையடுத்து அங்கு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.