Skip to main content

தானாகவே எல்லாம் சரியாகிவிடும் என்று அரசு நினைக்கிறதா?

Published on 20/11/2018 | Edited on 20/11/2018
gaja


 

 

மிகக் கொடூரமான கஜா புயல் தாக்குதலில் ஆறு மாவட்டங்கள் நாசமாகி உள்ளன. ஆனால், இதுவரை மின்சார வசதியையும், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கான வசதியையும் தமிழக அரசு நிறைவேற்றவில்லை. 
 

ஐந்து நாட்கள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையிலும் முதல்வர் எடப்பாடியோ ஹெலிகாப்டரில் பயணம் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம். இந்த பயணத்தின் மூலம் அவர் எதைச் சாதிக்க நினைக்கிறார்? எதைத்தான் சாதிக்க முடியும். அலறித் தவிக்கும் மக்களுக்கு நேரில் ஆறுதல் தெரிவிக்க மனமில்லாமல், வானில் பறந்து அவர்களுடைய வேதனையை வேடிக்கை பார்க்க விரும்புகிறாரா எடப்பாடி என்று அரசியல் விமர்சகர்கள் கோபமான கேள்விகளை முன்வைக்கிறார்கள்.


இதோ ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்த்த முதல்வர் எடப்பாடி, புதுக்கோட்டை நகருக்கு மட்டும் ஒரிரு நாளில் மின்சாரம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார். மீட்புக் குழுவினருக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார். முதல்வருக்கு முன்னரே எதிர்க்கட்சித் தலைவர் பல்வேறு இடங்களுக்கு நேரிலேயே சென்று மக்களுக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார். திமுகவினரால் இயன்ற நிவாரண உதவிகளையும் வழங்கியிருக்கிறார். ஸ்டாலின் முதல் ஆளாக நிற்க முடிகிறது என்றால், முதல்வரால் ஏன் நிற்கமுடியவில்லை என்ற கேள்வியை கேட்காத ஊடகங்கள், ஸ்டாலின் போனதால் என்ன நடந்துவிட்டது என்று விவாதம் நடத்துகின்றன. ஆனால், இப்போது முதல்வர் போயும்கூட ஒன்றும் நடக்கவில்லை என்பதே நிதர்சனம் என்பது தெரிந்துவிட்டது.
 

ஒரே உண்மையை இந்த இடத்தில் சொல்லவேண்டியிருக்கிறது. அதாவது முதல்வர் நேரடியாக சாலைவழியாக ஆறுதல் தெரிவிக்க புறப்பட்டிருந்தால், சாலைப் போக்குவரத்து போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்பட்டிருக்கும் என்பதை ஊடகங்கள் மறைக்கின்றன.


 

gaja

 

ஆனால், நிவாரணப் பணிகள் வேகமாக நடைபெறுவதாக அரசு வெறும் வாயில் முழம்போடுகிறது. நேற்றுவரை குடும்பத்தோடு நிம்மதியாக வாழ்ந்தவர்கள் இன்று நடுத்தெருவில் அடுத்த வேளை உணவுக்காக அலைபாயும் நிலையில், ஆத்திரம் வருவது இயல்புதான். அப்படி ஆத்திரப்பட்டு போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது போலீஸை ஏவி கொடூரமாக தாக்குதல் நடத்துவது எங்கே கொண்டுபோய் முடியுமோ தெரியவில்லை.
 

புயல் நிவாரணத்தில்கூட அரசியலைப் புகுத்துவது அரசுக்கு அழகல்ல என்றே நடுநிலையாளர்கள் கூறுகிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரலாறு காணாத கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Unprecedented heavy rains in california

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 

அதன்படி, கலிபோர்னியா பகுதியில் நேற்று (06-02-24) வரலாறு காணாத கனமழைக் கொட்டித் தீர்த்தது. இதில், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட சில இடங்களில் 25 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த வெள்ளத்தின் போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் பலரும் அதில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மணிக்கு 78 மைல் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் கிட்டத்தட்ட 8,75,000 வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த மழை வெள்ளத்தால் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வெள்ளம் குறித்து தேசிய வானிலை மையம் கூறியுள்ளதாவது, ‘5 முதல் 10 அங்குலங்கள் (12.7செ.மீ முதல் 25.4 செ.மீ) வரை பெய்துள்ளது. மேலும், இந்த மழையின் அளவு அதிகரிக்கக்கூடும்’ என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

Next Story

தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
Tuticorin fishermen banned from going to sea
கோப்புப்படம்

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதே சமயம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த முன்னறிவிப்பில், ‘தென் தமிழக கடலோரப் பகுதிகள். மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஜனவரி 11 ஆம் தேதி வரை மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் விடுத்திருந்த எச்சரிக்கையின் படி, குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து சுமார் 300 விசைப் படகுகளும், 2 ஆயிரம் நாட்டுப் படகுகளும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.