Skip to main content

கோவையில் நீர் விநியோகிக்கவிருக்கும் பிரான்ஸ் நிறுவனம்!! ஒப்பந்த நகல் கேட்டு போராடிவர் கைது!!

Published on 05/07/2018 | Edited on 05/07/2018

கோவை மாநகராட்சியில் 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்த நகலை வெளியிடக்கோரி மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் மாமன்ற உறுப்பினர் முன்னாள் மண்டல தலைவருமான பத்மநாபன் கைது செய்யப்பட்டார்.

 

water

 

 

 

கோவை மாநகரில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்ய பிரான்சை சேர்ந்த சூயஸ்  என்ற தனியார் நிறுவனத்துடன் கோவை மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்த நகலை வெளியிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள்  கவுன்சிலர் பத்மநாபன்,  கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயனை நேரில் சந்தித்து இன்றுமனு அளித்தார் .ஆனால் மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்த நகலை வெளியிட மறுத்ததுடன் ஆணையர் விஜய கார்த்திகேயன் முறையற்ற ரீதியில் பதிலளித்ததாகவும் கூறி தனிநபராக பத்மநாபன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

 

சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக தனிநபராக அமர்ந்து இந்த போராட்டத்தில் அவர் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் கவுன்சிலர் பத்மநாபனை போராட்டத்தை கைவிடும்படி உக்கடம்  காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.ஆனால் ஒப்பந்த நகலை மாநகராட்சி நிர்வாகம் மக்கள் பார்வைக்காக வெளியிட வேண்டும் எனவும், அது வரை மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தை தொடர போவதாக பத்மநாபன் தெரிவித்தார். இதனையடுத்து முன்னாள் கவுன்சிலர் பத்மநாபனை காவல் துறையினர்  கைது செய்தனர் . கைது செய்யப்பட்ட பத்மநாபன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் என்பதும் இவர் கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராகவும்  மண்டல தலைவராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.