Skip to main content

தமிழகத்தில் முதல் கரோனா வழக்குப் பதிவு! சிகிச்சைக்கு வர மறுத்த 2 பேர் மீது வழக்கு!!!

Published on 13/06/2020 | Edited on 13/06/2020

 

First Corona case registered in Tamil Nadu

 

தமிழகத்தில் கரோனா கடந்த 80 நாட்களாக தனது ஆட்டத்தை காட்டி வருகிறது, வகை தொகையின்றி சுனாமி வேகமெடுத்திருக்கிறது. இப்படியிருக்கும் கரோனா தொடர்பான முதல் வழக்கு நெல்லை மாவட்டத்தின் வி.கே.புரத்தில் பதிவாகியுள்ளது. வி.கே.புரம் ஊராட்சிக்கு சமீபமாக உள்ள சிவந்திபுரம் ஊராட்சிக்குட்பட்ட, புலவன்பட்டியின் கட்டபொம்மன் தெருவிலிருக்கும் வீட்டிற்கு கடந்த 8ம் தேதியன்று சென்னையிலிருந்து மாணவர் மற்றும் பெண் உட்பட 4 பேர் வந்துள்ளனர். 


அவர்களுக்கு நேற்று முன்தினம் அகஸ்தியர்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 2 பெண்கள் மற்றும் மாணவர் உட்பட 3 பேருக்குக் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதன் காரணமாக அவர்களை சிகிச்சைக்கு அனுப்புவதற்காக அம்பை ஊராட்சி ஆணையர் சுசீலா பீட்டர் பி.டி.ஓ. சங்கரகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்தனர். 

 

மண்டல துணை பி.டி.ஓ. சத்தியவாணிமுத்து, ஊராட்சி செயலர் வேலு சுகாதார மேற்பார்வையாளர் பெல்பின் உள்ளிட்டோர்கள் அவர்களை பாளை அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்க வந்தனர். மேலும் ஸ்பாட்டுக்கு வந்த அம்பை தாசில்தார் கந்தப்பன், சிவந்திபுரம் வி.ஏ.ஓ. குருகுலராமன் ஆகியோர் ஏற்பாடுகளைக் கவனித்தனர். இந்த நிலையில் கரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு வர முடியாது என்று அடம்பிடித்து தகராறு செய்ததுடன், தாசில்தாரையும் வி.ஏ.ஓ.வையும் மேற்கொண்டு பணி செய்யவிடாமல் தடுத்தனர். அவர்களை சமாதானப்படுத்த அதிகாரிகள் பலதடவை வேண்டுகோள் விடுத்தும் வேண்டுமென்றே நேரத்தைக் கடத்திய கரோனா நோயாளி மற்றும் அவரது உறவினர் ஒருவரும் வாக்குவாதம் செய்திருக்கின்றனர். 


பின்னர் ஒரு வழியாக மூவரும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் தாசில்தாரின் உத்தரவுபடி வேண்டுகோள் விடுத்தும், வர மறுத்துத் தகராறு செய்து, அடம் பிடித்த கரோனா நோயாளி மற்றும் அவரது உறவினர் ஒருவர் மீதும் வி.ஏ.ஓ.குருகுலராமன் வி.கே.புரம் போலீசில் புகார் செய்தார்.

அதிகாரிகளை உரிய பணி செய்ய விடாமல் தடுத்ததாக கரோனா நோயாளி உட்பட இருவர் மீதும் வி.கே.புரம் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப் பதிவு செய்தார். தமிழகத்தில் கரோனா தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட முதல் கிரிமினல் வழக்கு இதுவாகத்தானிருக்கும் என்கிறார்கள் சம்மந்தப்பட்டவர்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மக்களவை தேர்தல்;தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 Lok Sabha election; public holiday announced in Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில்,தமிழகத்தில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 511 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.