Skip to main content

தந்தையை வெட்டிக் கொன்ற பி.டி. ஆசிரியரின் வெறிச்செயல்!

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

Father lost his life by his son in thoothukudi

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தசரதன்(55). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் அஸ்வத் குமார் (30). இவர் அந்தப் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். மேலும், அஸ்வத் குமாருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அருணா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.

 

இந்த நிலையில், அஸ்வத் குமாருக்கும் அருணாவுக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கடந்த ஓராண்டாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதற்கிடையே, அஸ்வத் குமார் அவ்வப்போது தனது மாமனார் வீட்டிற்குச் சென்று குழந்தைகளைப் பார்த்து வந்துள்ளார். இருப்பினும், அவர் தனது மனைவி, குழந்தைகளுடன் சேர்ந்து வாழ முடியவில்லை என்ற வேதனையிலும் ஆத்திரத்திலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

 

இதனைத் தொடர்ந்து, ஆவேசமடைந்த அஸ்வத் குமார் நேற்று (10-11-23) காலை தனது மனைவி மற்றும் மாமனாரைத் தாக்குவதற்காக அரிவாளை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார். இதைப் பார்த்த அஸ்வத்குமாரின் தந்தை தசரதன் இந்த சம்பவம் குறித்து அருணாவுக்கு தொலைப்பேசி மூலம் தகவல் கொடுத்தார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட அருணா, வீட்டில் உள்ள அனைத்து கதவுகளையும் பூட்டிக் கொண்டார். அதன் பின்னர், அங்கு வந்த அஸ்வத்குமார் கேட்டின் மீது ஏறிக் குதித்து வீட்டுக் கதவுகளை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

 

இதற்கிடையே, அவரது தந்தை தசரதன் காரில் அங்கு வந்தார். அவர் தனது மகனை தடுத்து வெளியே இழுத்துச் செல்ல முற்பட்டார். இதில் ஆத்திரமடைந்த அஸ்வத்குமார் தனது தந்தையை அரிவாளால் சரிமாரியாக வெட்டினார். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னர், அஸ்வத்குமார் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். மேலும், இந்த சம்பவம் குறித்து அங்கிருந்த மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த கயத்தாறு காவல்துறையினர், தசரதன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அஸ்வத்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.