Skip to main content

மகன் சடலத்தை பார்த்ததும் உயிரிழந்த தந்தை... வேறு வழி தெரியாமல் உண்மையை ஒப்புக்கொண்ட விவசாயி!!

Published on 15/06/2021 | Edited on 15/06/2021

  

Father who died when son saw corpse; The farmer who admitted the truth without knowing any other way

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது மேலந்தல் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் காசிநாதன் (30). விவசாயம் செய்துவந்த இவர் நேற்று முன்தினம் (13.06.2021) அதிகாலை தனது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்புக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றுள்ளார். அப்படி செல்லும்போது அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் அவரது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளி கிழங்கைக் காட்டு விலங்குகள் நோண்டி தின்பதால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது என தனது மரவள்ளிக்கிழங்கு நிலத்தைச் சுற்றிலும் காட்டு விலங்குகளைத் தடுப்பதற்காக மின்சார வேலி அமைத்திருந்தார்.

 

இதுகுறித்து விபரம் அறியாத அப்பாவி காசிநாதன் அந்த வழியாக தனது வயலுக்குச் செல்லும்போது பாஸ்கரின் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார். சிறிது நேரத்தில் தனது நிலத்திற்கு வந்த பாஸ்கர் தன் நிலத்தில் போடப்பட்ட மின்சார வேலியில் சிக்கி காசிநாதன் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதை மறைப்பதற்காக காசிநாதன் சடலத்தைத் தூக்கிச் சென்று காசிநாதனின் கரும்பு தோட்டத்தில் போட்டுவிட்டு வந்துள்ளார். இதனால் யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக காசிநாதன் சடலத்தின் மீது பூச்சி மருந்தும் தெளித்துள்ளார் பாஸ்கரன். அதன் பிறகு எதுவும் தெரியாதது போல்  வீட்டுக்குச் சென்றுவிட்டார். 

 

எப்படியும் காசிநாதன் இறந்தது வெளியே தெரியும். நம் மின்சார வேலியில் சிக்கி இறந்தார் என்பதைப் போலீசார் கண்டுபிடித்துவிட்டால் நாம் வேறு வழியில்லாமல் உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டிய நிலை வரும் என்று அவரது மனசாட்சி உறுத்தியது. இதனால் பயந்துபோன பாஸ்கர், மணலூர்பேட்டை காவல் நிலையம் சென்று சரணடைந்தார். காசிநாதன் தனது வயலில் அமைத்திருந்த மின்சார வேலியில் சிக்கி இறந்தது குறித்து விவரமாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் பாஸ்கர் அழைத்துச் சென்று காசிநாதன் கரும்பு தோட்டத்திற்கு அவரது சடலத்தைத் தேடி கைப்பற்றினார்கள். இந்த தகவல் அறிந்த காசிநாதனின் தந்தை சுப்பிரமணியம் தன் மகன் இறந்துபோன தகவல் கிடைத்ததும் மகன் சடலமாக கிடந்த கரும்பு தோட்டத்துக்கு ஓடி வந்துள்ளார். 

 

மகன் சடலமாக கிடப்பதைப் பார்த்த சுப்பிரமணியம் அதிர்ச்சியில் அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்துள்ளார். பதறிப்போன அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மகன் இறந்த அதிர்ச்சி தாங்க முடியாமல் தந்தை மாரடைப்பால் இறந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காசிநாதனின் தாய் ராஜாமணி மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். காட்டு விலங்குகளுக்கு அமைக்கப்படும் மின்சார வேலியில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் வடமாவட்டங்களில் அவ்வப்போது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டேதான் உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.