Skip to main content

சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

Published on 17/08/2018 | Edited on 17/08/2018
go

 

சிதம்பரம் அருகே பாசன வாய்க்கால்கள் தூர் வாராததால் ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது என்றும் தூர் வாரும் பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் தெரிவித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 


 
    சிதம்பரம் அருகே உள்ளது சி.அரசூர் கிராமம். இக்கிராமத்தில் உள்ள தட்சன்தெரு பாசன வாய்க்கால் கடந்த 5 ஆண்டுகளாக தூர் வாரப்படவில்லை. இதனால் ஊருக்குள் கொள்ளிடம் ஆற்று வெள்ளம் புகுந்ததாக கூறி இக்கிராம விவசாயிகள், பொதுமக்கள் இன்று சிதம்பரத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

 

    பின்னர் அவர்கள் கையில் மனுக்களுடன், அலுவலகத்தின் வாயிலில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது தமிழக அரசுக்கு எதிராகவும், பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய அகில இந்திய  விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், 

     சிதம்பரம் சுற்று வட்டார இடங்களில் கடைமடை வரை பாசன வாய்க்கால்கள் தூர் வாரப்படாததால் பல ஊர்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், பல வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினாலும், பெரும்பாலான வாய்க்கால்கள் இன்னும் தூர் வாரப்படவில்லை என்றும், இதில் பெருமளவு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறினார்.  


      மேலும், அனைத்து பாசன வாய்க்கால்களையும் விரைவில் தூர் வாரி தண்ணீர் திறக்காவிட்டால், ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை மீண்டும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். போராட்டத்தில் விவசாயிகள்,பொதுமக்கள் மற்றும் வீராணம் ஏரி பாசன விவசாயிகள் சங்க தலைவர் பாலு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவை தேர்தல்;தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 Lok Sabha election; public holiday announced in Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில்,தமிழகத்தில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 511 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

'தாமதப்படுத்திக் கொண்டிருந்தால் மீண்டும் பிரச்சனை தான் உருவாகும்' - போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர்  

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
'If we keep delaying, the problem will arise here again' - Transport Workers' Union interviewed

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் மீண்டும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஐந்து கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று முடிவு எட்டப்படவில்லை. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் மீண்டும் பிப்ரவரி 21 ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு போக்குவரத்து சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ‘ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தையின் போது ஏழாம் தேதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று நிர்வாகம் கேட்டுக்கொண்டது. அதற்கு காரணம், உச்சநீதிமன்றத்தில் ஓய்வு பெற்றவருடைய பஞ்சப்படி தொடர்பான வழக்கு வருகிறது என்று சொன்னார்கள். அந்த அடிப்படையில் ஏழாம் தேதி அடுத்த பேச்சுவார்த்தை என்று தொழிலாளர் துறையும் சொன்னது. நேற்று உச்சநீதிமன்ற தீர்ப்பு மிகத் தெளிவாக ஓய்வூதியர்கள் உடைய நிலுவையில் இருக்கக்கூடிய பஞ்சப்படியை எல்லா வகையிலும் அமல்படுத்த வேண்டும் என்று  தீர்ப்பு கொடுத்துவிட்டது. ஆகவே அரசு உடனடியாக எந்த தாமதமும் இல்லாமல் ஓய்வூதியர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கக்கூடிய பணத்தையும், மற்றவர்களுக்கு நிலுவையில் இருக்கின்ற பணத்தையும் உடனடியாக செட்டில் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். தாமதப்படுத்தி கொண்டிருந்தால் மீண்டும் இங்கு பிரச்சனை தான் உருவாகும் என்று அவர்களிடம் சொல்லி இருக்கிறோம். இதை அரசுக்கு எடுத்துச் சென்று தீர்க்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்'' என்றனர்.