Skip to main content

மோசமான சூழல் ஏற்பட்டதால் வாழ வழி தெரியாமல் இருக்கும் விவசாயிகள்..!

Published on 17/05/2021 | Edited on 17/05/2021

 

Farmers who do not know the way to live due to bad conditions

 

நிலத்தை உழவுசெய்து, பண்படுத்தி, நீர்பாய்ச்சி, செடிகளுக்கு உரமிட்டு, பூச்சித் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்து, இரவு பகல் பாராமல் அதைப் பராமரித்து அறுவடை செய்யும்போது வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தங்கள் வீட்டு மாடுகளைவிட்டு மேயவைத்த விவசாயிகளின் நிலை கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள மன்னார்குடி.பு, மாம்பாக்கம், உளுந்து ஆண்டார்கோவில், பாண்டூர் உட்பட  பத்துக்கும் மேற்பட்ட அப்பகுதி கிராமங்களில் உள்ள விவசாயிகள், தங்கள் வயல்களில் ஆண்டுதோறும் இதுபோன்ற சீசனில் வெண்டை விவசாயம் செய்துவருகின்றனர். 

 

தற்போது வெண்டைக்காய் அறுவடை சமயம். ஆனால், வெண்டைக்காய் வாங்குவதற்கு வியாபாரிகள் முன்வரவில்லை. காரணம், இந்தக் கரோனா நோய் பரவல். கரோனா நோய் பரவல் காரணமாக காய்கறி சந்தைகள் முழு நேரமும் செயல்படவில்லை. காய்கறி மார்க்கெட்டுகளில் மதியம் 12 மணிவரை மட்டுமே விற்பனை என்ற நிலை. மினி டெம்போக்களில் காய்கறிகளை வாங்கிச் சென்று, கிராமம், நகரம் என தெருத்தெருவாக விற்பனை செய்துவந்த சிறு வியாபாரிகள், லாக்டவுன் காரணமாக அவர்களது வாகனங்கள் செல்வது தடுக்கப்படுவதால் அவர்களும் வாங்க வரவில்லை. 

 

Farmers who do not know the way to live due to bad conditions

 

சாகுபடி செய்த வெண்டைக்காய்களை விவசாயிகளே காய்கறி மார்க்கெட்டுக்கு எடுத்துச்சென்று வியாபாரிகளிடம் கொடுத்தாலும், எங்களுக்கு வியாபாரம் இல்லை, உங்களிடம் இருந்து வாங்கி நாங்கள் யாரிடம் விற்பது என்று வாங்க மறுக்கிறார்கள். இதனால் மனம் நொந்துபோன விவசாயிகள், வேறு வழியில்லாமல் தாங்கள் பாடுபட்டு கண்விழித்து நீர்பாய்ச்சி விளையவைத்த வெண்டை செடி வயல்களில் தங்களது மாடுகளைவிட்டு மேய்க்கிறார்கள். விவசாயிகளின் நிலை காலம் காலமாக இதே அவலத்தில்தான் உள்ளது.

 

“பயிர் செய்துள்ள காய்கறிகளைக் கொள்முதல் செய்து, குளிரூட்டப்பட்ட குடோன்களில் பாதுகாப்பாக வைத்து. விளைச்சல் இல்லாத நேரங்களில் அவற்றை விற்பனை செய்வதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும்” என்கிறார்கள் விவசாயிகள். “‘உப்பு விக்க போனா மழை கொட்டுகிறது, மாவு விக்க போனா சூறாவளி காற்று வீசுகிறது,’ இந்த நிலையில்தான் விவசாயிகளான எங்களின் நிலை உள்ளது. தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் இப்படிப்பட்ட எங்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்” என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.