Skip to main content

திருச்சியில் நடந்த ஏற்றுமதி பங்குதாரர் ஆலோசனைக் கூட்டம்  

Published on 30/06/2022 | Edited on 30/06/2022

 

Export Partner Consultative Meeting held in Trichy

 

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான ஏற்றுமதி ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவர் பேசும்போது, "திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஏற்றுமதியினை மேம்படுத்த அரசுத் தரப்பிலும், மாவட்டத் தரப்பிலும் முழு ஒத்துழைப்பு மற்றும் உதவிகள் வழங்கப்படும். ஏற்றுமதியை மேம்படுத்த அமைக்கப்பட உள்ள 75 மாவட்ட ஏற்றுமதி மையங்களில் ஒன்று திருச்சியில் அமையவுள்ளது” எனத் தெரிவித்தார்.

 

இந்தியாவின் பங்குதாரர் தொழில் வணிகத் துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரிடின்டி பச்சாவு பேசும்போது, "இக்கூட்டமானது ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றுமதி செய்வதில் உள்ள இடர்பாடுகளைக் கண்டறிந்து அதற்கான தீர்வுகளை வகுக்கவே நடத்தப்படுவது. எனவே, ஏற்றுமதியாளர்கள் தங்களுக்கான இடர்பாடுகள், தேவைகள் குறித்து தெரிவித்திடவும்” எனத் தெரிவித்தார். 


ஐ.டி.எஸ். களாடி ரிஷிகேஷ் ரெட்டி, “ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டு ஊராட்சி அளவிலிருந்து மாநில அளவில் உள்ள இடர்பாடுகளை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்து. அதற்கான தீர்வினை ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார். (APEDA) இயக்குநர் சோபனாகுமார், வேளாண்சார் பொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதிக்கு உகந்ததாக மாற்றும் தொழில் நுட்பங்களைப் பற்றி பேசினார். தபால் துறை மூலமாக நடக்கும் ஏற்றுமதியின் புள்ளி விவரங்களை, இந்தியா திருச்சி மண்டல அலுவலர் தினேஷ்குமார் தெரிவித்தார். 


தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி முனைவர்.சுரேஷ்குமார், வாழை ஏற்றுமதியை மேம்படுத்தும் தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார். திருச்சி விமான நிலைய இயக்குநர் தர்மராஜன், தக்க்ஷின் பாரத் கேட்வே டெர்மினல் மேலாளர் ஜெரால்டு. ஆகியோர் ஏற்றுமதியை மேம்படுத்திட அவர்களது துறைசார்ந்த திட்டங்கள் குறித்து விளக்கினார்கள். டீடிட்சியா மற்றும் பெல்சியா கூட்டமைப்பின் தலைவர்கள் ஏற்றுமதி சார்ந்த ஆலோசனை வழங்கினார்கள். திருச்சி மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் பிரபு ஜெயக்குமார் மோசஸ் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஏற்றுமதி நிலவரம் குறித்து விளக்கினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.