Skip to main content

தொழிளாளர்களின் வாழ்வியலை மீட்கக் கோரி ஏ.ஐ.டி.யு.சி. நாடு முழுக்க ஆர்பாட்டம்

Published on 11/05/2020 | Edited on 11/05/2020
erode - aiutuc



ஊரடங்கு என்ற பொது முடக்கத்தால் உருக்குலைந்துபோன ஏழைகள், கூலி தொழிலாளர்களின் வாழ்வை மீட்டெடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான  ஏ.ஐ.டி.யு.சி. இன்று இந்திய நாடு முழுமையாக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
 

ஈரோட்டில் முன்னாள் எம்.எல்.ஏ. நா.பெரியசாமி, சங்க தலைவர் சின்னசாமி தலைமையில் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு இன்று காலை ஆர்பாட்டம் நடைபெற்றது.
 

அவர்களின் கோரிக்கைகள் வருமாறு:,
 

1.அன்றாடம் உழைத்து, ஊதியம் ஈட்டி அதன்மூலம் வாழ்க்கை நடத்தும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரண நிதியும், உணவுப் பொருட்களும் தடையின்றி விரைவாக கொடுத்து முடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்!
 

2)பொது முடக்கத்தால் வருமானம் இழந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு மாதம் 7,500 ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும்!
 

3)கட்டுமானம், ஆட்டோ மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரண நிதி, உணவுப்பொருட்களை விரைவில் வழங்கிடவும்,
 

4)நலவாரிய அட்டையை புதுப்பிக்கவில்லை என்று காரணம் கூறி பதிவு செய்த தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும்  அதிகமானவர்களுக்கு   நிதி வழங்க மறுக்காதீர் எனவும்,
 

5)ஓய்வூதியர்கள் அனைவருக்கும் நிவாரண நிதியும் உணவுப்பொருட்களும் உடனே  வழங்கிடுக எனவும்,
 

6)  நலவாரிய மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டங்களை நடத்தி,  நிவாரணநிதியும் உணவுப்பொருட்களும் சரியாகச் சென்று சேர்வதற்கான வழிவகைகளைத் தீர்மானித்து செயல்படுத்த வேண்டும்.
 

7) மத்திய மாநில அரசாங்கங்களின் உத்தரவுப்படி, நிரந்தர, கேஷுவல், கான்ட்ராக்ட்  தொழிலாளர்கள் அனைவருக்கும் பொது முடக்க காலத்திற்கு முழுச் சம்பளம் வழங்கச் செய்திடுக,
 

8) வேலைநீக்கம், சம்பள வெட்டு, வேலை நேரத்தை அதிகரிக்கிற முயற்சிகளை தடுத்து நிறுத்திட வேண்டும்.
 

9) பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வுகளை நிறுத்துகிற, நிலுவை தொகைகளை மறுக்கிற நடவடிக்கையை கைவிட வேண்டும்.
 

10) புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சொந்த ஊர் திரும்ப, ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து வசதிகளை, கட்டணம் வசூலிக்காமல் ஏற்பாடு செய்து தர வலியுறுத்தியும்,
 

11) கோவிட்-19 கிருமித் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க, உயிரை பணயம் வைத்து பணி புரிந்த மருத்துவ பணியாளர்கள், உள்ளாட்சி துப்புரவு பணியாளர்கள் ஆகியோரை பணி நிரந்திரம் செய்திட வேண்டும் எனவும்,
 

12) அரசு அறிவித்த சிறப்பு ஊதியத்தை துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் விரைவில் வழங்கிட கோரியும்,
 

13) நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கு அரசு நிச்சயித்த குறைந்தபட்ச ஊதியத்தை  வழங்கு! அந்த ஊதியத்தையும் குறைக்க அரசு நியமித்துள்ள குழுக்களை உடனடியாகக் கலைத்து, இந்த பணியாளர்களுக்கு அரசு மரியாதை செய்கிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
 

14) ஆஷா, மதிய உணவு மற்றும் அங்கன்வாடி  உள்ளிட்ட திட்ட ஊழியர்களுக்கு 'தொழிலாளர்' தகுதி வழங்கி, குறைந்தபட்சம் மாதம்18,000 ரூபாய் சம்பளம் அவர்களுக்கு வழங்கிட வேண்டும்.
 

என இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. முடிவில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதாவிடம் மனு கொடுத்தனர். இதேபோல் சத்தியமங்கலம் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் என இந்தியா முழுக்க ஏஐடியுசி தொழிற்சங்கத்தில் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.