Skip to main content

அமித்ஷாவின் ஊழல் குற்றச்சாட்டுக்கு எடப்பாடியும், பன்னீர்செல்வமும் பதிலளிக்க வேண்டும்: திவாகரன்

Published on 12/07/2018 | Edited on 12/07/2018


பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் ஊழல் பற்றிய கருத்துக்கு முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உரிய பதில் அளிக்க வேண்டும் என அண்ணா திராவிட கழக பொது செயலாளர் திவாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,

ஒரு மத்திய ஆளும் கட்சியின் தேசிய தலைவர் மிகப்பெரிய ஒரு குற்றச்சாட்டை தமிழகத்தின் மீது வைக்கிறார் என்றால், இதற்கு முறையாக பதிலளிக்க வேண்டிய கடமை எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அவருடன் உள்ள அமைச்சர்களுக்கும் உள்ளது.

இவர்கள் பதிலளிக்க தாமதப்படுத்தக்கூடாது. இந்நேரம் அவர்கள் இதற்கு பதிலளித்திருக்க வேண்டும். ஏன் பதிலளிக்கவில்லை என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்