Skip to main content

E.M.I. தொகை பிடித்தம்! வங்கி அதிகாரிகளின் அடாவடித்தனம்! போராட்டத்தில் ஓய்வுபெற்ற VAO

Published on 19/04/2020 | Edited on 19/04/2020

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ளது பெ. பூவனூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். 71 வயதுள்ள இவர் கிராம நிர்வாக அலுவலராக அரசு பணி செய்து ஓய்வு பெற்றவர். இவர் விருத்தாசலம் கடலூர் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில், தன் பெயரில் வரவு செலவு கணக்கு வைத்துள்ளார். இந்த வங்கி  மூலம் அரசு வழங்கும் ஓய்வூதிய பலன்களை பெற்று வந்தார்.


 

 

eee



இந்த நிலையில் தற்போது கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓய்வூதியதாரர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக கூடாது என்பதற்காக வங்கி கணக்கிலிருந்து யாருக்கும் இ.எம்.ஐ. தொகை பிடித்தம் செய்யக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் தர்மலிங்கத்தின் வங்கிக்கணக்கில் இருந்து கடந்த 2-ஆம் தேதியன்று 5500 ரூபாய் என இரண்டு மாதத்திற்கான இ.எம்.ஐ. தவணைத் தொகையாக 11 ஆயிரம் ரூபாயை வங்கி அதிகாரிகள் தர்மலிங்கத்தின் கணக்கில் இருந்து பிடித்தம் செய்து கொண்டனர்.
 

பணம் பிடித்தம் செய்ததை அறிந்த தர்மலிங்கம் வங்கிக்குச் சென்று வங்கி அதிகாரிகளிடம் அரசு உத்தரவை மீறி பணத்தை பிடித்தம் செய்யலாமா? என்று கேட்டுள்ளார். அதற்கு அதிகாரிகள் இன்னும் ஒரு வாரத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை உங்கள் வங்கிக் கணக்கில் சேர்த்து விடுகிறோம் என்று கூறியுள்ளனர்.
 

ஆனால் இரண்டு வாரங்கள் கடந்தும் அவர் வங்கி கணக்கில் வங்கி ஊழியர்கள் பணத்தை கணக்கில் சேர்க்கவில்லை. இதுகுறித்து நேற்று மீண்டும் வங்கிக்கு சென்று வங்கி மேலாளரை சந்தித்து தர்மலிங்கம் கேட்டுள்ளார். அப்போது வங்கி மேலாளர் கோபமாக தர்மலிங்கத்திடம் இப்போது வங்கியில் பணமே இல்லை. அதனால் உங்கள் கணக்கில் பணத்தை சேர்க்க முடியாது என்று கோபமாக கூறியுள்ளார்.
 

இந்த பதிலைக் கேட்ட தர்மலிங்கம் கோபத்துடன் வங்கியை விட்டு வெளியே வந்தவர், வங்கியின் முன்பு தனிமனிதனாக அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுபற்றி தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் தர்ணா போராட்டம் நடத்திய தர்மலிங்கத்தை சந்தித்து விபரம் கேட்டனர்.  தர்மலிங்கத்தின் நியாயமான கோரிக்கையை புரிந்து கொண்ட போலீசார், இதுபற்றி வங்கி மேலாளரை சந்தித்து விசாரித்தனர்.

 

i

பிரச்சனை பெரிதாக ஆனதும் உடனே காவல்துறையினரிடம் தர்மலிங்கத்தின் பிடித்தம் செய்த பணத்தை உடனடியாக அவரது கணக்கில் சேர்த்துவிடுவதாக கூறினார்கள். அதன்படியே சில நிமிடங்களில் தர்மலிங்கத்தின் பணத்தை அவரது கணக்கிலும் சேர்த்துவிட்டனர். வங்கியில் பணமே இல்லை என்று கூறிய வங்கி மேலாளர், தர்மலிங்கம் வீதியில் இறங்கி போராடிய உடனே அவரது கணக்கிற்கு எப்படி பணம் போய் சேர்ந்தது. இதன்மூலம் போராடினால்தான் எதுவும் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. வங்கி முன்பு தர்மலிங்கம் நடத்திய திடீர் தர்ணா போராட்டம் விருத்தாசலத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஓய்வு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Former Prime Minister Manmohan Singh retires

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேர் இன்று (03.04.2024) ஓய்வு பெறுகின்றனர். அவர்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர் ஆவார். இவருடன் 9 மத்திய அமைச்சர்களும் ஓய்வு பெறுகின்றனர். இதன் மூலம் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

கடந்த 1991 ஆண்டு அக்டோபர் மாதம் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2019 ஆண்டில் இருந்து தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். 

மன்மோகன் சிங் இந்தியாவின் 14 ஆவது பிரதமராக கடந்த 2004 ஆம் ஆண்டு பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக பதவி வகித்து வந்தார். முன்னதாக இவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், கடந்த 1991 ஆண்டு முதல் 1996 வரையிலான முன்னாள் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

அதே சமயம் மன்மோகன் சிங் ஓய்வைத் தொடர்ந்து, அந்த பதவிக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.