Skip to main content

முதல்வர் குறித்த விமர்சனம் - ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி!

Published on 31/03/2021 | Edited on 31/03/2021

 

jkl

 

சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர். எழிலனை ஆதரித்து கடந்த மார்ச் 26ஆம் தேதி அன்று தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு விளக்கம் அளித்த ஆ.ராசா, “நான் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை, நான் பேசியதை வெட்டி ஒட்டி பரப்பி வருகிறார்கள்" என்று தெரிவித்திருந்தார். 

 

அதன் தொடர்ச்சியாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம், சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து விளக்கம் கேட்டு நேற்று (30.03.2021) ஆ.ராசாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், 'முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக ஆ.ராசா இன்று மாலை 06.00 மணிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கம் அளிக்காத பட்சத்தில் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்