Skip to main content

ராமநாதபுரம் மாவட்டத்தில் பூமி விரிசல்,பொதுமக்கள் பீதி!

Published on 26/07/2018 | Edited on 26/07/2018
boo

 

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில் 1986ஆம் ஆண்டு ஒஎன்சிசி நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு 1992ம் ஆண்டு 15க்கும் மேற்பட்ட கிணறுகள் அமைத்து எரிவாயு எடுத்தனர். அப்போது இருந்து அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் திருப்புல்லாணி சுற்றியுள்ள பகுதிகளான காஞ்சிரங்குடி,கொட்டகுடி ஆறு,போன்ற பகுதிகளில் மேலும் 16 கிணறுகள் அமைத்து எரிவாயு எடுக்க ஆரம்பித்தனர்.

 

இந்நிலையில் நேற்று திருப்புல்லாணி அருகே உள்ள வலையனேந்தல் இந்திராநகர் பகுதியில் 50க்கும் மேற்ப்பட்ட காட்டுநாயக்கர் சமுகத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  அப்பகுதியில் உள்ள ராசமணி,காளீஸ்வரி ஆகியோர் வீட்டில் முதலில் சிறிய விரிசல் ஏற்பட்ட உடனே வீட்டை விட்டு வெளியே வந்தனர்.  அந்த விரிசல் மேலும் அகலமாக வீட்டிலிருந்த பொருட்கள் கீழே விழந்தன.  இதையடுத்து அப்பகுதி உள்ள பொதுமக்கள் கையில் கிடைத்த பொருட்களை மட்டும் எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி பொதுஇடத்தில் தஞ்சமடைந்தனர். இப்பகுதியில் 4 இன்ஞ்ச் அகலத்திற்கு 17 இடங்களில் 10 அடி முதல் 100 அடி நீளம் வரை விரிசல் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து காவல்துறைக்கும், வருவாய்துறைக்கும் தகவல் கொடுத்தனர். அங்கு வந்து பார்வையிட்ட கீழக்கரை டி.எஸ்.பி ரவீச்சந்திரன் மற்றும் கீழக்கரை தாசில்தார் ராஜேஸ்வரி உடனே மாவட்ட கனிமவளங்கள் துறை அதிகாரி சுகிதா ரஹீமாக்கு தகவல் கொடுத்தனர்.  அங்கு வந்த அதிகாரி அப்பகுதியை பார்வையிட்டவரிடம் பத்திரிக்கையாளர்கள் என்ன காரணத்தினால் விரிசல் ஏற்ப்பட்டது என கேட்டபோது, அருகில் இருந்த துணைவட்டாட்சியர் ஜலால் அவரிடம் கேட்ட வேண்டாம் சிறிது நேரம் பொறுங்கள் நான் கூறுகிறேன் என்று பத்திரிக்கையாளர்களை விரட்டுவதிலேயே குறியாக இருந்தார்.

 

boomi

 

இப்பகுதியை சேர்ந்த ராசமணி, காளீஸ்வரி கூறுகையில் பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை,இதுமத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதால் எங்களால் ஒன்னும் செய்ய முடியாது என்று மாவட்ட நிர்வாகம் கூறுகிறது. செவிடன் காதில் ஊதிய சங்காய் மத்திய அரசு உள்ளது. இரவு நேரங்களில் பயமுறுத்தும் சத்தங்கள் கிணறுகளிலிருந்து வருவதால் நாங்கள் தினம்தினம் ஒருவித பயத்துடன் தூங்குகிறோம்.எப்பொழுது என்ன நடக்கும் என்று தெரியவில்லை என்றனர்.

 

இதுபற்றி மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் யாரும் பீதியடையவேண்டாம், அதிகாரி அப்பகுதியை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என்கிறது.

- பாலாஜி

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

Next Story

''குசும்ப பாருங்க... வாட்ஸ் அப்பில் இப்படியெல்லாம் பரப்புகிறார்கள்''-ஓபிஎஸ் ஆதங்கம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
They are spreading all this on WhatsApp" - OPS

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சின்னத்தை திராட்சை கொத்து என பலர் வாட்ஸ் அப்பில் தவறாக பரப்புவதாக குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ராமநாதபுரத்தில் திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர்கள் மூன்று சின்னங்களைக் குறிப்பிட வேண்டும். நான் மூன்று சின்னங்களைக் குறிப்பிட்டு கொடுத்திருந்தேன். இப்பொழுது நிறைய பன்னீர்செல்வங்கள் வந்து விட்டார்கள். என்னுடன் சேர்த்து ஆறு பன்னீர்செல்வம். மற்ற ஐந்து பேரும் நான் என்னென்ன சின்னம் எழுதிக் கொடுத்தேனோ அதே சின்னத்தை எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஒரு குழப்ப சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அப்படி செய்துள்ளார்கள். இப்பொழுது என்ன செய்திருக்கிறார்கள் என்றால், குசும்பு பாருங்க, ஓபிஎஸ் சின்னம் வாளி என வாட்ஸ் அப்பில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் சின்னம் திராட்சை கொத்து என வாட்ஸ் அப்பில் பரப்புகிறார்கள்.

நான் எழுதிக் கொடுத்த மூன்று சின்னங்களையும் ஓபிஎஸ் சின்னம் ஓபிஎஸ் சின்னம் என்று செல்லில் இன்று பறக்கவிட்டு வருகிறார்கள். இது எவ்வளவு கீழ்த்தரமான அரசியல். ஒரு சின்னத்தை இரண்டு வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கள் முறையில் கொடுப்பார்கள். சின்னம் ஒதுக்குவது குறித்து நேரம் காலம் ஒதுக்கப்பட்டது. உங்களுடைய வாழ்த்துக்களால், ஆசிர்வாதத்தால் நீங்கள் தந்த வரத்தினால் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அது உங்களால் தான் கிடைத்தது. உங்கள் ஆசியால் எனக்கு இந்தச் சின்னம் கிடைத்தது''என்றார்.