Skip to main content

அண்ணாமலைப்பல்கலைக்கழம் போலி மருத்துவ சான்றுக்கு துணை போகிறதா? பல்கலைக்கழக ஊழியர் மீது  புகார்

Published on 31/03/2018 | Edited on 31/03/2018
theepan

 

பல தமிழ்படங்களில் பட்டங்கள் படிக்காமலே போலி சான்றை அச்சடித்து விற்பனை செய்வதை காட்சியாக பார்த்து இருக்கிறோம். அந்த சம்பவங்களை உறுதிபடுத்தும் வகையில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் போலி மருத்துவ சான்றை தயார் செய்து கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கரூர் மாவட்டம் அரவகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெயபாண்டி. இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் மருத்து இளங்கலை(எம்பிபிஎஸ்) பட்ட படிப்பு படித்தாக கூறி அவரிடம் உள்ள மருத்துவ சான்றிதழ்களை மருத்துவ மேற்படிப்பு படிப்பதற்காக  டெல்லியிலுள்ள இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பியுள்ளார். மருத்துவ சான்றிதழ்களின் உண்மை தன்மையை அறிய மருத்துவ கவுன்சில் சம்பந்தபட்ட பல்கலைக்கழகத்திற்கு சான்றிதழ்களை அனுப்பியுள்ளது.

 

அதனைதொடர்ந்து ஜெயபாண்டி என்பவரின் மருத்துவ பட்டபடிப்பு சான்றிதழ்களை ஆய்வு செய்த பல்கலைகழக கே. பிரிவு (section) கணினி ஊழியர் தீபன்,  ஜெயபாண்டியின் மருத்துவ சான்றிதழ்கள் போலியானவை என்றும் மருத்துவ கல்லூரியில் இவர் படிக்கவில்லை என்று மருத்துவ கவுன்சிலுக்கு பதில் இ.மெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.

 

இந்த விபரத்தை தெரிந்து கொண்ட ஜெயபாண்டி அண்ணாமலை பல்கலை கழகத்திற்கு வந்து சம்பந்தபட்ட ஊழியரான தீபன் (35) என்பரிடமும் அவருக்கு நெருக்கமான சில ஊழியர்களிடம் பல லட்சங்களையும் பார்டிகளை வைத்து சான்றிதழின் உண்மை தன்மையை மாற்றி அனுப்பி உதவுமாறு கூறியதாக பல்கலைக்கழக வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதன்படி கணினி அலுவலர் தீபன் மருத்துவ கல்லூரியில் படிக்காத ஜெயபாண்டிக்கு படித்தாக சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை  தயார் செய்து மீண்டும் மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பியுள்ளார்.

 

இதனை பார்த்து சந்தேகம் அடைந்த மருத்து கவுன்சில் ஜெயபாண்டி மருத்துவ படிக்கவில்லை என்றும் அவரது சான்று போலி என்று  தகவல் அனுப்பி விட்டு பின்பு ஒரு வாரம் கழித்து ஜெயபாண்டி மருத்துவ பட்டபடிப்பு படித்தாக மீண்டும் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் அனுப்பியது சம்பந்தமாக மருத்துவ கவுன்சில் பல்கலைக்கழக துணைவேந்தர் மணியன், பதிவாளர்(பொறுப்பு) ஆறுமுகம் ஆகியோரை நேரிடையாக அழைத்து விளக்கம் கேட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய கால அவகாசம் கேட்டு வந்துள்ளனர். இந்நிலையில் பல்கலைகழக  பதிவாளர்.ஆறுமுகம் பல்கலை கழக கே. செக்க்ஷன் அலுவலர்கள் மற்றும் சம்பந்தபட்ட ஊழியர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது கே. செக்க்ஷன் கணினி பிரிவு அலுவலர் தீபன் மற்றும் கணினி பிரிவு பொறுப்பாளர் உள்ளிட்ட சில ஊழியர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டது  விசாரணையில் தெரிய வந்தது.

 

 பின்பு இச்சம்பவம் தொடர்பாக கணினி அலுவலர் தீபன் மீது பல்கலை கழக நிர்வாக தரப்பில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் அண்ணாமலை நகர் காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை செய்து பல்கலைக்கழக ஊழியர் தீபனை தேடி வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தில் பலலட்சகணக்கில் பணம் கைமாறியுள்ளது என்றும் மேலும் பல பல்கலைக்கழக அலுவலர்கள் ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களின் கோரிக்கைகளை ஏற்று பல்கலைக்கழகத்தை சீர்படுத்தும் நோக்கில்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசின் முழுகட்டுபாட்டில் எடுத்து தனி அதிகாரிகளை நியமித்து பல்வேறு மாற்றங்களை செய்தார். ஆனால் அங்குள்ள ஊழியர்கள் சிலபேர் அவர்கள் செய்யும் புரோகர் தனம், கையாடல்,தேர்வில் வெற்றி பெற வைப்பது. சான்றிதழ்களுக்கு உண்மை தன்மையை மாற்றி கொடுத்து உள்ளிட்ட குற்றச்செயலுக்கு பணம் வாங்குவது போன்ற பல்வேறு முறைகேடுகளிலிருந்து அவர்களை மாற்றி கொள்ளாததால் பெருமைவாய்ந்த பல்கலைக்கழகத்தின் மாண்பு சீரழிவை நோக்கி செல்கிறது என்று கல்வியாளர்கள் வேதனையடைந்துள்ளனர்.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏ.வி. ராஜு மீது கருணாஸ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Complaint against AV Raju in Karunas Police Commissioner's office

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். மேலும் தன்னை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவின் சட்ட விதிகளைத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார்’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்நிலையில், கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசுபவர்களை பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது. அவதூறு பேச்சுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்' எனத் தெரிவித்திருந்தார். அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு த்ரிஷாவுக்கு ஆதரவாக சேரன், ஃபெப்சி அமைப்பு, மன்சூர் அலிகான், விஷால் உள்ளிட்டவர்கள் பேசினார்கள். இதனைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கம் தற்போது கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே ஏ.வி. ராஜு, “என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில், சில ஊடகங்களில் திரைப்படத் துறையினரை அவதூறாக நான் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நான் பேசியது அரசியல் ரீதியாக மட்டும் தான் பேசினேன். அந்த இடத்தில் பேட்டியை முடித்த பின்பு ஒரு சிலர் கேட்ட கருத்துக்கு நான் அந்த விளக்கத்தை சொன்னேன். எந்த இடத்திலும் திரைத்துறையினரை வருத்தப்படும் அளவிற்கு பேசக் கூடியவர் நான் அல்ல.

ஒருவேளை அப்படி பேசியதாக தகவல்கள் உங்களுக்கு தவறாக கிடைத்திருந்தால், நான் உங்கள் அனைவருக்கும், பெப்சிக்கும், திரைப்பட நடிகர் சங்கத்திற்கும் மற்றும் சம்பந்தப்பட்ட திரிஷாவுக்கும் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவேளை மனம் புண்படும்படி இருந்திருந்தால் என் சார்பாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என வீடியோ வெளியிட்டிருந்தார். 

கூவத்தூர் விவகாரத்தில் த்ரிஷாவை சம்பந்தப்படுத்தி பேசியபோது கருணாஸ் குறித்தும் பேசியிருந்தார். இந்த நிலையில், ஏ.வி. ராஜு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். மேலும் அவரது பேட்டியை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

‘உன் நாய் எனக்கு வேண்டாம்!’ - ஒரு மாதம் கழித்து திருப்பிக் கொடுத்தவருக்கு கத்திக் குத்து

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
person who bought the dog and returned it after a month was stabbed

சாத்தூர் வட்டம் – புல்வாய்பட்டி கிராமத்தில் செல்லத்துரையும் அவருடைய  மனைவி முத்துலட்சுமியும் சொந்தமாக ஆடு மேய்த்துப் பிழைத்து வருகிறார்கள். அதே கிராமத்தில், கூலி வேலை பார்க்கும் வெங்கல கருப்பசாமி, மனைவி மாரீஸ்வரி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். செல்லத்துரையிடம் ரூ. 5000 விலை பேசி, ஒரு மாதம் கழித்துப் பணம் தருவதாகக் கூறி வேட்டை நாய் ஒன்றை வாங்கினார் வெங்கல கருப்பசாமி.

ஒருமாதம் கழித்து “எனக்கு இந்த நாய் வேண்டாம்..” என்று திருப்பிக் கொடுத்தபோது, வாங்க மறுத்திருக்கிறார் செல்லத்துரை. அதனால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், “நாயைத்  திருப்பியா கொடுக்கிற?” என்று ஆவேசமான செல்லத்துரை, வெங்கல கருப்பசாமியை கத்தியால் குத்தியிருக்கிறார். முதலில் ஏழாயிரம் பண்ணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றதைத் தொடர்ந்து, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் வெங்கல கருப்பசாமி. அவர் அளித்த புகாரின் பேரில், செல்லத்துரை மீது சாத்தூர் தாலுகா காவல்நிலையம் வழக்குப் பதிவு  செய்துள்ளது.

அதே சாத்தூர் காவல்நிலையத்தில் செல்லத்துரை மனைவி முத்துலட்சுமி வெங்கல கருப்பசாமி மீது ஒரு புகாரளித்துள்ளார். அதில், தன் கணவர் செல்லத்துரையை வழிமறித்து கத்தியால் குத்த வெங்கல கருப்பசாமி  முயன்றபோது, அந்தக் கத்தியை தான் பிடுங்கியதாகவும், அப்போது தன்னை மார்பிலும் கழுத்திலும் வெங்கல கருப்பசாமி அடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், வெங்கல கருப்பசாமி மீதும் சாத்தூர் தாலுகா காவல்நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது.