Skip to main content

ஒழுங்கீன ஆசிரியை வேண்டாம்...போராட்டத்தில் கொல்லங்குடி மக்கள்.!!!!

Published on 17/11/2018 | Edited on 17/11/2018
 Do not be an alternate teacher ...

 


காமராசரின் சமதர்மத் திட்டத்தால் 'கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்ற பழமொழியை மறைந்து' பள்ளி இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்...! எனுமளவிற்கு மாறியுள்ள காலம் இது.! அப்படியிருக்கையிலே, "ஒழுங்கீன நடவடிக்கைகளால் அப்புறப்படுத்தப்பட்ட ஆசிரியை மீண்டும் இடமாற்றம் எனும் பெயரில் இங்கு கொண்டு வரக்கூடாது.!" என உடற்கல்வி ஆசிரியை ஒருவருக்கெதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர் கிராமமக்கள்.

 

 Do not be an alternate teacher ...

 

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியினை முன்னிறுத்தித் தான் இந்த குற்றச்சாட்டே.! தொடக்கத்தில் 1200 மாணவர்கள் வரை படித்து வந்த  கொல்லங்குடி அரசு மேல் நிலைப்பள்ளியில் தற்பொழுது சுமார் 700 மாணக்கர்கள் மட்டுமே கல்வி பயில்கின்றனர். அதற்குக் காரணமாக குறிப்பிடுவது, "ஏற்கனவே இங்கு உடற்கல்வி ஆசிரியையாக பணியாற்றி மாற்றலாகிய அருள் கலைச்செல்வியே.!! மீண்டும் இதே பணியிடத்திற்கு வர பணத்தை வாரி இறைத்து வருகின்றார். அவர் இங்கு வரும் பட்சத்தில் மாணக்கர்களின் சேர்க்கை எண்ணிக்கை வெகுவாக குறைந்ததோடு மட்டுமில்லாமல், மாணக்கர்களிடையே ஒழுங்கீனமும் நிலைக்கும் அவரே காரணம். ஆகவே அவர் இங்கு வேண்டாம்." என மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் கோரிக்கை வைத்துள்ளனர் இக்கிராம மக்கள்.

 

 Do not be an alternate teacher ...

 

"பள்ளியிலேயே மாத்திரைகளை விற்பது, தனக்கு ஒத்துப் போகாத ஆசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டினை வைக்க, பொய்யாக மாணவிகளை தயார் படுத்துவது, பள்ளியில் உள்ள மாணக்கர்களிடையே தவறான பண்பினை விதைத்து அவர்களை ஒழுங்கீனமாக மாற்றுவது உள்ளிட்ட விவகாரங்களால் தான் 4 ஆண்டிற்கு முன் இங்கிருந்த உடற்கல்வி ஆசிரியை அருள் கலைச்செல்வி இடமாற்றம் செய்யப்பட்டார். இப்பொழுது புதிதாக பதவியேற்றுள்ள கல்வி அதிகாரி சாமி சத்யமூர்த்தியை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு, இதே இடத்திற்கு இடமாற்றலாகி வர, அதிக பணத்தை இறக்கி செலவு செய்து வருகின்றார் அந்த உடற்கல்வி ஆசிரியை.! அவர் மீண்டும் வந்தால் பள்ளிக்கு நல்லதல்ல.! ஒழுங்கீனமான ஆசிரியை எங்கள் கிராமப் பள்ளிக்கு வேண்டாம்." என்கின்றனர் அந்தப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருநாவுக்கரவும், பள்ளிக்கல்விக்குழு தலைவர் காளிமுத்துவும். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.