திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்ட திமுகவின் ஊராட்சி செயலாளர் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை அனைவரையும் அழைத்து கட்சி பிரச்சனைகள் குறித்து விவாதித்து வருகிறார். அதன்படி இன்று மார்ச் 11ந்தேதி திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் காலையும், மதியம் திருவண்ணாமலை தெற்கு மாவட்டமும் விவாதத்தில் கலந்துக்கொள்கின்றன. இதற்கான அழைப்பு கடிதம் இரண்டு தினங்களுக்கு முன்பே கட்சியின் கீழ்மட்டம் முதல் உயர்மட்டம் வரையிலானவர்களுக்கு தரப்பட்டது. கட்சியினர் சென்னை அண்ணா அறிவாலயம் சென்று வர ஊராட்சி செயலாளர்கள் பேருந்து வசதி மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மார்ச் 10ந்தேதி இரவு சமூக வளைத்தளத்தால் திருவண்ணாமலை மாவட்ட திமுகவில் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை தெற்கு மா.செவும், திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏவாகவும் இருப்பவர் எ.வ.வேலு. இவர் திருவண்ணாமலை நகரை குப்பை இல்லாத நகரமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக தூய்மை அருணை என்கிற அமைப்பை தொடங்கினார். கட்சிக்கடந்து தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்பில் அனைத்து கட்சி நிர்வாகிகள், வியாபாரிகள், முக்கியபிரமுகர்கள், பொதுமக்கள் என அனைவரின் ஒத்தொழைப்போடு தொடங்கப்பட்ட இந்த குழு, வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை நகரத்தில் தூய்மை பணியில் ஈடுப்படுகின்றன.
இதுப்பற்றி தகவல்களை பொதுமக்களுடன் பகிர்ந்துக்கொள்ள, இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்ள தூய்மை அருணை என்கிற முகநூல் குழு தொடங்கப்பட்டுள்ளது. அதேப்போல் தூய்மை அருணை திருவண்ணாமலை என்கிற பெயரில் முகநூல் கணக்கும் உள்ளது. இந்த குழுவில் ஒவ்வொரு வாரமும் தூய்மை பணி செய்யும் புகைப்படங்கள், மற்ற கட்சி நிகழ்வுகளின் புகைப்படங்கள் பதிவேற்றப்படுகின்றன. ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அதில் உறுப்பினராக உள்ளார்கள்.
இந்நிலையில் மார்ச் 10ந்தேதி இரவு 10.30 மணியளவில், தூய்மை அருணை திருவண்ணாமலை என்கிற குழுவில் கலைஞர் கருணாநிதியை விமர்சிக்கும் ஒரு புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டது. அது பதிவேற்றம் செய்யப்பட்ட சில நிமிடங்களில் பரபரப்பாகிவிட்டது. பதிவு போட்டவரை கட்சி விசுவாசிகள் விமர்சிக்க அடுத்த அரைமணி நேரத்தில் அந்த புகைப்பட பதிவு நீக்கப்பட்டது. பதிவு நீக்கப்பட்டாலும் கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது. வேலுவின் நேரடி பார்வையில் நடைபெறும் இந்த குழுவில் இப்படியொரு பதிவு அதுவும் தலைவரை நேரடியாக விமர்சித்து வந்தது எப்படி என கேள்வி எழுப்புகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட தொண்டர்களை செயல்தலைவர் சந்திக்கும் நாளுக்கு முன்னால் இப்படியொரு பதிவு முகநூலில் வந்தது ஏதோச்சையாக வந்ததா அல்லது திட்டமிட்டு வந்ததா என பெரும் பட்டிமன்றம்மே நடைபெறுகிறது. அதற்கு காரணம் சில வாரங்களுக்கு முன்னால் எ.வ.வேலு, திமுகவை விட்டு விலகி பாஜகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்கிற தகவல் வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
எ.வ.வேலு முகநூலில் பற்றவைத்த நெருப்பு - திமுகவினர் கொதிப்பு!
சார்ந்த செய்திகள்
Next Story
கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.
Next Story
“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.
இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.
மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும்.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும்.
அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.