Skip to main content

அறநிலையத்துறை அலுவலரை முற்றுகையிட்டு தீட்சிதர்கள் போராட்டம்  

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

 

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பொதுமக்கள் 24, 25, 26, 27 ஆகிய நான்கு நாட்கள் வழிபடத் தடை விதித்துள்ளதாகக் கோவில் தீட்சிதர்கள் கனகசபை வாயிலில் அதற்கான பதாகையை வைத்துள்ளனர். இது தமிழக அரசின் உத்தரவுக்கு எதிரானது என இந்து சமய அறநிலையத்துறையின் தில்லை அம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா தலைமையில் வட்டாட்சியர் செல்வகுமார், காவல்துறையினர் பதாகையை அகற்ற வந்தபோது சரியான காவல்துறையினர் பாதுகாப்பு இல்லாததால் கோவில் தீட்சிதர்கள் செயல் அலுவலரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர். இதனால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்