Skip to main content

வித்தியாசமான தர்ப்பணம் செய்த சமூக நல அமைப்பு!

Published on 22/07/2020 | Edited on 22/07/2020

poosaari palayam.

 

பூசாரிபாளையம் பகுதியைச் சேர்ந்த சமூக நல அமைப்பினர் வித்தியாசமான முறையில் தர்ப்பணம் செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றனர்.

 

வீட்டில் உள்ளவர்கள் இறந்து விட்டால் அவர்களுக்கு ஆடி அமாவாசை அன்று இறந்தவருக்கு மரியாதை செய்யும் விதமாக படையலிட்டு குடும்பத்தினர்  வணங்குவார்கள். ஆனால் வித்தியாசமாக, 1902- லிருந்து 2020 வரை பூசாரி பாளையத்தில் இறந்துபோன முன்னோர்களுக்கு மாலை, பழங்கள் என படையலிட்டு அந்த ஊரையே வணங்க வைத்து ஊர் மக்களை நெஞ்சுருக வைத்திருக்கிறார்கள் பூவை சமூக நல அமைப்பினர்.

 

poosaari palayam.

 

அது என்ன 1902-லிருந்து கணக்கு? எனக் கேட்டால், ‘பக்கத்தில் உள்ள தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆங்கிலேயரால் கட்ட கல்வெட்டு அமைத்தபோது அங்கே வேலை செய்தவர்கள் இந்த ஊர் மக்கள் தான். அப்போதிலிருந்து கணக்கிட்டுதான் மரியாதை செலுத்தினார்கள். இனி ஒவ்வொரு ஆண்டும் இந்த ஊர் இறந்த மக்களின் நினைவைப் போற்றி தர்ப்பணம் செய்வோம்’ என்கிறார்கள் பூவை சமூக நல அமைப்பினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆடிக் கிருத்திகையையொட்டி, முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்! 

Published on 23/07/2022 | Edited on 23/07/2022

 

Devotees thronged Murugan temples on the occasion of Aadik Krithikai!

 

ஆடிக் கிருத்திகையையொட்டி, திருத்தணி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் ஐந்து மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டன. தமிழகம் மற்றும் ஆந்திராவில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருத்தணியில் குவிந்துள்ளனர். 

 

பலரும் மொட்டையடித்து, சரவண பொய்கை குளத்தில் நீராடி, பின்னர் காவடி எடுத்து மலைக் கோயிலுக்கு சென்றனர். அதைத் தொடர்ந்து, சுமார் ஐந்து மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் முருகப் பெருமானுக்கு பட்டு வஸ்திரங்கள் வழங்கப்பட்டன. 

 

இன்று மாலை சரவண பொய்கை தெப்பக் குளத்தில் தெப்ப திருவிழா நடைபெறவுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால் திருத்தணியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல், மருதமலை, பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பிரசித்திப் பெற்ற முருகன் கோயில்களில் பக்தர்கள் குவிந்துள்ளனர். 

 

Next Story

"வீரன் தயாராகிறான்" - அடுத்த அறிவிப்பை வெளியிட்ட ஆதி

Published on 25/05/2022 | Edited on 14/11/2022

 

hiphop aadhi veeran movie shoot begins today

 

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஆதி, ‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’, ‘சிவகுமாரின் சபதம்’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். இவர் நடிப்பில்  கடைசியாக வெளியான அன்பறிவு படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. 

 

இந்நிலையில் ஆதி நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் ஆதி அடுத்ததாக மரகத நாணயம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான ஏ.ஆர்.கே சரவண் இயக்கும் வீரன் படத்தில் நடிக்கவுள்ளார். சத்யஜோதி  நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதியே இசையமைக்கவும் உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. விரைவில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.  மேலும் இது குறித்த வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்த ஆதி "வீரன் தயாராகிறான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.