Skip to main content

பாதுகாப்பு அளிக்க போலீஸ் மறுப்பு; எஸ்.பி அலுவலகம் முன்பு காதலர்கள் தர்ணா

Published on 29/04/2023 | Edited on 29/04/2023

 

 dharmapuri lovers secrutity related is dharmapuri lovers secrutity related issue police not taken action issue sue police not taken action issue 

 

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், பூங்கொடி தம்பதியரின் மகள் கலையரசி (வயது 23) எம்.எஸ்.சி கணித பாடப்பிரிவை படித்துள்ளார். இவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த தாதம்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் வெங்கடேசன் என்பவரும் போச்சம்பள்ளி பகுதியில் உள்ள தனியார் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனத்தில் கடந்த ஒரு வருடக் காலமாகப் பணியாற்றி வந்துள்ளனர்.

 

இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி வேலைக்கு சென்ற கலையரசி வீடு திரும்பவில்லை எனவும் அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் கலையரசியின் பெற்றோர் காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இன்று காரிமங்கலம் காவல்துறையினர் கலையரசியின் பெற்றோரை தொடர்பு கொண்டு காவல் நிலையத்திற்கு வரவழைத்துள்ளனர். பெற்றோர் வந்து பார்த்தபோது கலையரசியும் அவரது காதலன் வெங்கடேஷ் இருவரும் இருந்துள்ளனர்.

 

இது குறித்து காவல்துறையினர் விசாரணையின் போது இருவரும் கடந்த ஒரு வருடக் காலமாகக் காதலித்து வந்ததாகவும் 21ஆம் தேதிக்கு பிறகு சென்று இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், இருவரும் இரு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காரிமங்கலம் காவல் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு கேட்டுள்ளனர். ஆனால், காவல்துறையினர் இருவருக்கும் பாதுகாப்பு தர முடியாது எனவும் இருவரும் பிரிந்து செல்லவும் எனக் கூறி காலையில் இருந்து மாலை வரை கண்டு கொள்ளாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

 

 dharmapuri lovers secrutity related issue police not taken action issue 

 

இதையடுத்து மனமுடைந்த காதல் ஜோடி தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு சேலம் தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் காதல் ஜோடியை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காதல் ஜோடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.