Skip to main content

குண்டும் குழியுமான நாகை சாலை; புறக்கணிக்கும் அமைச்சர் ஒ.எஸ்.மணியன்!!

Published on 09/11/2018 | Edited on 09/11/2018

நாகப்பட்டினத்தில் போக்குவரத்து அதிகம் நிறைந்த சாலைகள் முழுவதும், மழையால் பாதிக்கப்பட்டு குண்டும், குழியுமாக மாறியிருக்கிறது. சாலையில் செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெருத்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 

damaged road in nagai

 

கடந்த சில தினங்களுக்கு முன் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. 

 

 

இந்நிலையில், நாகப்பட்டினத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் பெரும்மழையால் நகரத்தில் உள்ள முக்கியமான சாலைகள், போக்குவரத்து நிறம்ப காணப்படும் சாலைகள் முழுவதும் சிதிலமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளன.

 

 

36 வார்டுகளைக்கொண்ட நாகை நகராட்சி சாலைகளும் பராமரிப்பு இல்லாமலும், மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்படாமலும் இருப்பதால், மழைநீர் வெளியேற முடியாமல் சாலையிலேயே தேங்கி பல்வேறு நோய்களை உருவாக்கிவருகிறது. அதோடு கனமான வாகனங்களும் செல்வதால் சிதிலமடைந்து சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக மாறிவிட்டது.

 

damaged road in nagai

 

" நாகை பகுதியின் சாலைப் போக்குவரத்து என்பது, பொதுமக்களுக்கு சவாலாக மாறியுள்ளது. போக்குவரத்து நிறைந்த நாகை பழைய பேருந்து நிலையம், நீலாயதாட்சியம்மன் கோயில் தெற்குவீதி, மேலவீதி, புதிய பேருந்து நிலையம், பப்ளிக் ஆஃபீஸ் ரோடு  உள்ளிட்ட சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள், மாணவ, மாணவியர், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்." என்கிறார் சமுக ஆர்வளரும், முன்னாள் அக்கரைப்பேட்டை ஊ.ம.தலைவருமான.மனோகரன்.

 

 

"சாதாரணமா இருசக்கர வாகனங்களில் செல்வோர்களில் பெரும்பாலானோர் பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில்   உள்ள மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்படாமல் போனதால், தண்ணீர் வெளியேற முடியாமல் சாலையிலேயே தேங்குகிறது. இதனால், சாலையில் அரிப்பு ஏற்பட்டு பள்ளங்கள் ஏற்படுகின்றன.  மழைநீர் வடிகால்களை தூர்வார நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க  வேண்டும். " என்கிறார்கள் வர்த்தக சங்கத்தினர்.

 

 

நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில்,  பூம்புகார், சீர்காழி, வேதாரண்யம், மயிலாடுதுறை  ஆகிய  4 சட்டமன்றத்தொகுதிகள் அதிமுக வசமே இருக்கிறது, கீழ்வேளூர் தொகுதியை தவிர மீதமுள்ள நாகை தொகுதியும் அதிமுக ஆதரவு கட்சியான ம.ஜ.கவிடம் உள்ளது. கூட்டனி கட்சியாக இருந்தாலும் அமைச்சர் ஒ.எஸ்.மணியன் வேண்டுமென்றே நாகை தொகுதியை புறக்கணிக்கிறார்," என்கிறார் ம.ஜ.க பிரமுகர் ஒருவர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விசாரணைக் கைதி மரணம்; சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
madurai youth karthi incident Relatives involved in the road block

மதுரை மாவட்டம் மதிச்சியம் என்ற பகுதியில் கார்த்திக் (வயது 30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தார். இத்தகைய சூழலில் வழிப்பறி வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் போலீசாரால் கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் 3 ஆம் தேதி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, மருத்துவ தகுதிச் சான்று வழங்கப்பட்ட பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து 4 ஆம் தேதி திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்ட ஒரே நாளில் சிறையில் இருந்து உடல் நலக்குறைவால் விசாரணை சிறைக்கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. மேலும் கார்த்திக் உயிரிழப்புக்கு காவல்துறையினரே காரணம் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். 

madurai youth karthi incident Relatives involved in the road block

இந்நிலையில் இளைஞரின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறியும், உரிய நிவாரணம் அளிக்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே இன்று (07.04.2024) சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

Next Story

தமிழகத்தில் பரவும் வதந்தி; காவல்துறை எச்சரிக்கை!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
The spread in Tamil Nadu; Police alert

தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வட மாநிலங்களில் இருந்து கும்பல்கள் கிளம்பி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வடமாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

அண்மையில் சென்னையில் ஐடி துறையில் பணியாற்றும் திருநங்கை ஒருவர் இரவில் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வரும் பொழுது அவரின் வினோத தோற்றத்தால் குழந்தை கடத்த வந்த நபர் என பிடித்த சிலர், அவரை அரை நிர்வாணமாக மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய காட்சிகள் வைரலாகி இருந்தது.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ராந்தம் சோதனை சாவடி பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் குழந்தையைக் கடத்த முயன்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிக்கிய இளைஞரை தாக்கினர். அதன் பின்னர் அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து கூட்டிச் சென்றனர். அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

nn

அதனைத் தொடர்ந்து நேற்று திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிப்பட்டியில் குழந்தை கடத்த வந்தவர் என இளைஞர் ஒருவரை அப்பகுதி மக்கள் அடித்து தாக்கினர். அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை மீட்டு 108 வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் கொண்டு செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பிடிபட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவரை போல உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

nn

இந்நிலையில் நாகை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்த வட மாநில கும்பல் வந்துள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரப்பிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்று சமூக வலைத்தளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக வரும் செய்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.