Skip to main content

8 வழிச்சாலை... நம் கனிம வளங்களை அள்ளிச் செல்லும் ஜிண்டால் முதலாளிக்கானது..  எடப்பாடி அரசுக்கு பாலபாரதி எச்சரிக்கை..

Published on 13/06/2018 | Edited on 13/06/2018

போராடும் மக்களை கொன்றுகுவிக்கும் ஏதேச்சை அதிகாரத்தை கைவிடாவிட்டால் உங்களை நாங்கள் சும்மா விடமாட்டோம் என எடப்பாடி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலபாரதி.

 

balabarathi


 

‘போராடுவோம் தமிழகமே’ என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமையன்று நடைபெற்ற பிரச்சாரத்தில் அவர் பேசியது,

மத்தியில் ஆளும் மோடி அரசும், அதன் ஊதுகுழலாகச் செயல்படும் மாநில எடப்பாடி அரசும் மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. அவர்கள் ஏதாவது ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தால்.. கார்பரேட் நிறுவனங்களுக்கு சேவகம் செய்யும் திட்டமாகவே இருக்கும். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம், டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட அனைத்தும் ஏழை, எளிய மக்களை காவு வாங்கி பெரு முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் திட்டமாகவே இருக்கிறது.

அந்த வகையில் தற்பொழுது சேலத்திலிருந்து சென்னை வரை 8 வழிச்சாலை அமைத்தே தீருவேன் என எடப்பாடியார் அடம்பிடிக்கிறார். சாதாரண மக்களின் போக்குவரத்து வசதிக்காகவா இதைச் செய்கிறார்? சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து இரும்பையும், பிளாட்டினத்தையும் எடுத்து ஜிண்டால் உள்ளிட்ட கார்பரேட் கம்பெனிக்கு தாரைவார்க்கத் துடிக்கிறார்கள். அவர்கள் இலகுவாக சென்னை துறைமுகத்திற்கு கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்கே இந்த எட்டுவழிச்சாலை. இதற்காக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலைங்களையும், மக்களின் வாழ்விடங்களையும், மலைகளையும் அழிக்கத் துடிக்கிறார்கள். ஏற்கனவே, சேலத்திற்கு விமானச் சேவை அளிக்கப்பட்டதும் ஜின்டால் முதலாளி வந்து இறங்குவதற்குத்தானெ ஒழிய மக்களுக்கானது அல்ல.

 

balabarathi


 

 

 

போராடுகின்ற மக்கள் எல்லாம் சமூக விரோதிகள் என்கிறார்கள். யார் சமூக விரோதி? மணலைக் கடத்துபவன், மலைகளை வெட்டியெடுப்பவன், இயற்கை வளங்களை கொள்ளையடிப்பவன், பொது வினியோகத் திட்டத்தை சீரழிப்பவன், அரசாங்க சொத்தை கொள்ளையடிப்பவன், மக்கள் வரிப்பணத்தை சுரண்டுபவன் இவர்கள் தானே உண்மையான சமூக விரோதி. மதுக்கடைகளுக்கு எதிராக, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய ‘மக்கள் அதிகாரத்தை’  சேர்ந்த 6 பேர் மீது தேச விரோத வழங்கு போட்டுள்ள எடப்பாடி அரசுதான் சமூக விரோத அரசு.

 

 

கையில் கொடிகூட கொண்டு போகாமல் குழந்தைகள், பெண்களுடன் அமைதியாக பேரணி சென்ற தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. வெகுதூரத்திலிருந்து அதிநவீன துப்பாக்கியுடன் குறிப்பிட்ட நபர்களை குறிபார்த்து சுடப்பட்டுள்ளனர். ஒருவர்கூட முழங்காலுக்கு கீழே சுடப்படவில்லை. நெஞ்சிலும், தலையிலும், வாயிலுமாக சுடப்பட்டுள்ளனர். எடப்பாடி அரசு ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சவால் விடுத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் எதேச்சையதிகாரத்தை கைவிடாவிட்டால் உங்களை நாங்கள் சும்மா விடாமாட்டோம். போராடும் மக்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருப்போம். மத்தியில் பிஜேபி அரசையும், மாநிலத்தில் அதிமுக அரசையும் வீழ்த்துவதற்கு விரிவான களம் அமைப்போம். என்றார் பாலபாரதி..

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நூதன முறையில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஐ. பெரியசாமி!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Minister I.Periyasamy who collected votes in the traditional manner

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் ஒன்றியப் பகுதிகளில் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தையொட்டி புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் முருகபவனம் பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் துவங்கியது. அப்போது அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரத்தில் பேசும் போது, “மக்கள் பணியே மகேசன் பணி என செயல்படுபவர் தான் சச்சிதானந்தம். நாம் மகத்தான வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைப்போம். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. சச்சிதானந்தம் எம்.பி. ஆகிறார்” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

அதை தொடர்ந்து சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் பேசுகையில், “இது புறாவிடு தூது அல்ல... இந்த புறா டெல்லி வரை பறந்து சென்று வரும். புறாவை டெல்லிக்கு அனுப்பி நமது மாநிலத்திற்கான நிதியை பெற்று வருமா? என்பது சந்தேகமே. இருந்தாலும் இந்த புறாவை பறக்க விட்டு நமது பிரச்சாரத்தை துவக்கி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி” எனக் கூறினார். 

Next Story

“மோடிக்கு செல்லப் பெயர் வைத்து உள்ளேன்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
I have given a pet name to Modi  Minister Udhayanidhi's speech

இந்தியா கூட்டணி சார்பில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திண்டுக்கல் மணிக்கூண்டில் வேனில் இருந்தபடி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் பெரியசாமி மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ஐ.பி. செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “தமிழகத்தில் நடப்பது குடும்ப ஆட்சி என நரேந்திர மோடி சொல்லி வருகிறார். நான் சொல்கிறேன் ஆமாம் கலைஞரின் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. இந்த ஒட்டுமொத்த தமிழகமும் கலைஞரின் குடும்பம் தான். மோடி சொல்கிறார் தி.மு.க.வினருக்கு தூக்கம் போய்விட்டது என்று பேசி வருகிறார். ஆமாம் தூக்கம் போய் விட்டது உங்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக எங்களுக்கு தூக்கம் போய்விட்டது. உங்களை வீட்டிற்கு அனுப்பும் வரை எங்களுக்கு தூக்கம் கிடையாது. உங்களை ஆட்சியிலிருந்து அகற்றாமல் நாங்கள் தூங்கப் போவதில்லை. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினா அல்லது மிஸ்டர் 28 பைசாவா என மோதி பார்ப்போமா. வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நமது வேலை ஒன்றே ஒன்றுதான். அனைவரையும் வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று வாக்கை செலுத்தி மோடிக்கு தலையில் மிகப்பெரிய கொட்டு வைத்தாக வேண்டும். வைப்பீர்களா?

கடந்த 10 வருடமாக நரேந்திர மோடி அவருக்கு ஒரு செல்லப் பெயர் வைத்து உள்ளேன் எடப்பாடி பழனிச்சாமிக்கு நமது முதல்வர்களும் பாதம் தாங்கிய பழனிச்சாமி என்று பெயர் வைத்துள்ளார். அதேபோல நரேந்திர மோடிக்கு நான் ஒரு பெயர் வைத்துள்ளேன். மிஸ்டர் 28 பைசா. கடந்த 10 வருடங்களாக தமிழ்நாடு பக்கம் தலை வைத்து பார்த்ததில்லை. பிரதமர் மோடி கடந்த தேர்தலின் போது மதுரைக்கு வந்து ஒரே ஒரு செங்கலை வைத்து எய்ம்ஸ் மருத்துவமனை வந்ததாக கூறினார். அந்த செங்கல்லையும் நான் எடுத்து வந்து விட்டேன். தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. தேர்தல் வந்ததும் மோடி கடந்த 10 நாட்களாக தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறார். ஆனால் புயல் அடித்தபோது வரவில்லை. கடந்த டிசம்பர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் புயல் வெள்ளம் வந்து பெரும் சேதம் ஏற்பட்டது.

மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் களத்தில் நின்று மக்கள் பணி செய்தனர். ஆனால் ஒன்றிய பிரதமர் வரவில்லை. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தார். எல்லாத்தையும் பார்த்துவிட்டு காசு தருகிறேன் என கூறினார். ஆனால் முதலமைச்சர் தார்மீக உரிமையில் எங்கள் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 37 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடாக கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு நிர்மலா சீதாராமன் நாங்கள் என்ன பணம் கொடுக்கிற மெஷினா என்ன கேள்வி கேட்டார். தமிழகத்தில் வெள்ளம் வந்த போதும், புயல் வந்த போதும் பிரதமர் மோடி எட்டிப் பார்க்கவில்லை. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாங்கள் என்ன ஏடிஎம் மிஷினா என எங்களை கேள்வி கேட்டார். அதற்கு நான் திருப்பி கேட்டேன். இது உங்க அப்பன் வீட்டு பணமா...இது எங்கள் வரிப்பணம் என்று. இது தவறு என்றார். தமிழகத்துக்கு வெள்ளம், புயல் வந்தபோது வராத பிரதமர், தற்போது தேர்தல் என்றதும் ஓடி ஓடிவருகிறார். தேர்தல் வந்ததால் தமிழகத்தை சுற்றி வருகிறார். பாசிச ஆட்சியை விரட்டும் வரை நாம் அனைவரும் தூங்கக் கூடாது”எனப் பேசினார்.