Skip to main content

விபத்தில் உயிரிழந்த தம்பதி.. டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை..

Published on 07/09/2021 | Edited on 07/09/2021

 

Couple passes away in accident .. Driver arrested and interrogated ..

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள விளம்பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (50). இவரது மனைவி சரஸ்வதி (46). கணவன், மனைவி இருவரும் சேலம் மாவட்டத்தில் உள்ள பிரபலமான தலைவாசல் காய்கறி சந்தைக்குச் சென்று, காய்கறிகளை வாங்கி வந்து, கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கம். 

 

இவர்கள் தங்களுக்கு சொந்தமான ஆட்டோவில் விளம்பாவூரிலிருந்து நேற்று (06.09.2021) காலை 6 மணிக்கு காய்கறி வாங்குவதற்காக தலைவாசல் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். ஆட்டோவை பெரியசாமி ஓட்டிச் சென்றுள்ளார். அந்த ஆட்டோ சின்னசேலம் பிரிவு சாலை அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரில் கரூரிலிருந்து எம்.சாண்ட் மணல் ஏற்றிவந்த லாரி ஒன்று ஆட்டோ மீது வேகமாக மோதியது. இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. 

 

இதில், பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அவரது மனைவி சரஸ்வதியை ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சரஸ்வதியும் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் உள்ளிட்ட போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். பெரியசாமியின் மகன் அஜித்குமார் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து, லாரி டிரைவர் வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.