Skip to main content

மாவட்ட வாரியாக கரோனா பாதிப்பு விவரம் வெளியீடு!

Published on 03/07/2020 | Edited on 03/07/2020
ுப

 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம் அமலில் உள்ளது. 

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2,082 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை  மொத்தமாக 1,02,721 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது வெளியாகியுள்ளது. மதுரையில் முன் எப்போதும் இல்லாத அளவாக 270 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இன்று புதிய தொற்று கண்டறியப்படவில்லை. இன்றைக்கு 2,357 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தமாக 58,378 பேர் கரோனா பாதிப்பில் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 35,028 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்