Skip to main content

மேலும் ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கரோனா தொற்று உறுதி!

Published on 23/07/2020 | Edited on 23/07/2020

 

f

 

தமிழகத்தைப் பொறுத்த வரையில் கரோனாவின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகின்றது. அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. 

 

சட்டமன்ற உறுப்பினர்களில் முதலில் தி.மு.க. உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சை பலனின்றி சில வாரங்களுக்கு முன் மரணமடைந்தார். அடுத்து தமிழக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, தங்கமணி, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மஸ்தான், கணேசன், செங்குட்டுவன், காந்தி ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். சிலர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மற்ற உறுப்பினர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கோவிந்தராஜ் தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவரையும் தேர்ந்து மொத்தம் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்