Skip to main content

  தமிழக முக்கிய தலைவர்கள் கூடிய அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு 

Published on 07/10/2018 | Edited on 07/10/2018
mml

 

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் திருச்சியில் அக்டோபர் 7ஆம் தேதி அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.

 

இந்திய அரசியலமைப்பு சட்டமானது வேற்றுமையில் ஒற்றுமை காணும் வகையில் நாட்டின் பன்மை பண்பாடுகளை அங்கீகரித்து, பல்வேறு மத, மொழி, கலாச்சார பண்பாடுகளையும் கவனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது. மாநிலங்களுக்கு அதிகாரங்களை அளித்து மத்தியிலும் கூட்டாட்சி தத்துவத்தை அங்கீகரித்து வந்தது.

 

இந்தநிலையில், ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே மொழி, ஒரே சட்டம் என்ற பெயரால் நாட்டின் பன்மை பண்பாடுகளை சீர்குலைக்கும் பணிகள் அதிவேகமாக நடந்து வருகின்றன. மாநில உரிமைகளை பறித்து மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்படுகின்றன. அரசியல் அமைப்பு சட்டத்தில் பண்பாடு விழுமிகளை ஒவ்வொன்றாக பறிக்கும் முயற்சியில் மத்தியல் ஆளும் பிஜேபி அரசு ஈடுபட்டு வருகிறது. அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க ஜனநாயக முறையில் அனைவரும் ஓரணியில் திரட்டு முயற்சியாகத் தான் இந்த மாநாட்டில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் இன்று ஒன்று கூடினார்கள்.

 

mm2

 

இந்த மாநாட்டிற்காக திருச்சியில் முக்கிய வீதிகளில் விளம்பர பலகைள், போர்டுகள், திருச்சி மாநகர் முழுவதும் வைக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் குவிந்தனர். காலையிலிருந்து இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

 

திருச்சி நாவலூர் மீரான் திடலில் நடைப்பெற்று வரும் மனிதநேய மக்கள் கட்சியின் அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட்டின் தொடக்கமாக தமுமுக மாணவர் அமைப்பான சமூகநீதி மாணவர் இயக்கத்தின் "மாணவச் சமூகம் எழுகவே" கருத்தரங்கம் சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாநில செயலாளர் S.நூர்தீன் தலைமையில் நடைப்பெற்றது.

 

mm3

 

திராவிட கழக மாணவர் அணி ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,இந்திய மாணவர் பெருமன்றம் V.மாரியப்பன், அ னைத்திந்திய மாணவய் பெருமன்றம் சீ.தினேஷ்,இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு(தமிழ்நாடு) மாநில கல்வி வளாகச்செயலாளர் R.அபுல்ஹசன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பேரா.அருணன்,சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் மதுரை மக்கள் கண்கானிப்பகம் செயல் இயக்குனர் ஹென்றி டிபேன்,தமுமுக துணை பொதுச் செயலாளர் முனைவர்.பேரா.ஜெ.ஹாஜாகனி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

 

mm4

 

கருத்தரங்கத்தில் சமூகநீதி மாணவர் இயக்கத்தின் லோகோ மற்றும் பாடல் வெளியிடப்பட்டது.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர் திராவிடர் கழகம்)
வி.நாராயணசாமி (முதல்வர், புதுச்சேரி மாநிலம்)
வி.பி.துரைசாமி (துணைப் பொதுச்செயலாளர், திமுக)
எஸ்.திருநாவுக்கரசர் (தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி)
வைகோ (பொதுச் செயலாளர், மதிமுக)
கே.பாலகிருஷ்ணன் (மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்)
ரா.முத்தரசன் (மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
பேரா. கே.எம்.காதர் மொய்தீன் (தேசிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
தொல்.திருமாவளவன் (தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி)
 முனைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா (தலைவர், மமக)
எஸ்.ஹைதர் அலி (பொதுச் செயலாளர் தமுமுக)
ப.அப்துல்சமது (பொதுச் செயலாளர் மமக) ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.