Skip to main content

தி.மு.க குடும்ப அரசியல் பற்றி கேள்வி எழுப்பாதது ஏன்? - கார்த்தி சிதம்பரம் எம்.பி கேள்வி!

Published on 17/11/2020 | Edited on 17/11/2020

 

congress party mp karthi chidambaram press meet at pudukkottai district

 

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி கார்த்தி சிதம்பரம், "தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளிடம் குடும்ப அரசியல் குறித்து கேள்வி எழுப்பாதது ஏன்? குடும்ப அரசியல் குறித்து காங்கிரஸ் கட்சியிடம் மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்? பல மாநிலங்களில் முக்கியத் தலைவர்களின் வாரிசுகளே அடுத்தடுத்து பதவிகளுக்கு வருகின்றனர்.

 

பீகார் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் தேர்தல் சூழலைக் கணிக்க முடியாது. பீகார் நிலவரம் வேறு; தமிழக நிலவரம் வேறு; தி.மு.க.வை தமிழகத்தில் ஆட்சியில் அமர்த்துவோம். எதிர்க்கட்சிகள் அஞ்சுவதற்கு அமித்ஷா ஒன்றும் சர்வாதிகாரி அல்ல." என்றார்.


 

 

சார்ந்த செய்திகள்