Skip to main content

பத்தாம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய சக மாணவன்! 

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

conflict between students in kaviripattinam school

 

காவேரிப்பட்டணம் அருகே, சிறப்பு வகுப்பில் ஏற்பட்ட சிறு தகராறால் ஏற்பட்ட முன்விரோதத்தால் பத்தாம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய சக மாணவன் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள பன்னிஅள்ளியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தேர்வு இல்லாத நேரத்தில் மாணவர்களுக்கு பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்துவது வழக்கம். இதேபோல் மே 14ம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடந்ததால் மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர்.


அப்போது மாணவர்களில் ஒருவன் திடீரென்று பள்ளி வளாகத்தில் கிடந்த மாங்கொட்டையை எடுத்து சக மாணவன் மீது வீசியுள்ளான். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மற்ற மாணவர்கள் தகராறை விலக்கி விட்டதை அடுத்து, இருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். இந்த நிலையில் மறுநாள் (மே 15) நடந்த சிறப்பு வகுப்புக்கு மாங்கொட்டையை எடுத்து வீசிய மாணவன் வரவில்லை. இதனால், ஏற்கனவே மாங்கொட்டையால் அடி வாங்கிய சக மாணவன், ''இன்று நீ பள்ளிக்கு வந்திருந்தால் உன்னை தீர்த்துக் கட்டியிருப்பேன்,'' என மாங்கொட்டையை எறிந்த மாணவனின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு குரல் பதிவு மூலம் குறுந்தகவல் அனுப்பி இருந்தான். 


இதையடுத்து திங்கள் கிழமை (மே 16) நடந்த சிறப்பு வகுப்பு அவ்விரு மாணவர்களும் வந்திருந்தனர். குரல் பதிவு மூலம் குறுந்தகவல் அனுப்பிய மாணவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த மாணவனின் முதுகில் நேற்று குத்தினான். இதில் அவனுக்கு தோள்பட்டைக்குக் கீழ் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. எதிர்பாராமல் நடந்த இந்த தாக்குதலில் கத்திக்குத்துக்கு ஆளான மாணவன், ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தான். 


இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், அவனை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


காவேரிப்பட்டணத்தில் நடந்த மாணவனின் கத்திக்குத்து சம்பவம் பள்ளி மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.