Skip to main content

“இது முதலமைச்சரின் கனவு திட்டம்” - அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி!

Published on 12/10/2021 | Edited on 12/10/2021

 

sgsdfghf

 

பயோ மைனிங் முறையில் சென்னை பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கை அகழ்ந்தெடுத்து, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அப்பகுதியை சீர்படுத்துவதற்கான திட்டங்களைப் பார்வையிட்டு, அதில் ஒரு திட்டப்பகுதியை இன்று (12.10.2021) அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன் ஆகியோர் துவக்கிவைத்தனர். சென்னை பெருங்குடியில் உள்ள 235 ஏக்கர் குப்பைக் கிடங்கை இன்று காலை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மாநிலங்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் அங்குள்ள குப்பைகளை அகற்றும் பணிகளைப் பார்வையிட்டு பின் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

 

முதலில் பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, “குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரிப்பது நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு மிகவும் சவாலான ஒரு பணி. பல பேரூராட்சிகளில் குப்பைகள் கொட்டுவதற்கான இடங்களைத் தேடுவதே பெரும் சிக்கலாக உள்ளது. ஒருபுறம் குப்பைகளை மக்கள் எடுக்கச் சொல்கிறார்கள் மற்றொருபுறம் அந்தக் குப்பைகளை தங்கள் இடங்களில் கொட்ட வேண்டாம் என்கிறார்கள். இந்த சிக்கல்களைக் களையவே பயோ மைனிங் முறையில் பிளாஸ்டிக் பொருட்கள் தனியாக, உலோகங்கள் தனியாக, மக்கும் குப்பைகள் தனியாக என்று குப்பைகளைப் பிரிப்பதற்காகதான் டெண்டர் விடப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மேயராக இருந்த காலகட்டத்தில்தான் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் காரணமாக கடந்த பத்து ஆண்டு காலமும் எதுவுமே செய்யாமல் விட்டுவிட்டனர்.

 

faaf

 

இந்த பயோ மைனிங் முறை என்பது பெருங்குடி பகுதியில் உள்ள மொத்த குப்பைகளை 6 பேக்கேஜ்களாக பிரித்து, அடுத்த மூன்று ஆண்டுகளில் இப்பகுதியை மீட்டெடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பெருங்குடிப் பகுதியின் 235 ஏக்கரில் 34 லட்சத்தி 2000 டன் பழைய குப்பைகள் மட்டும் உள்ளது. இந்தப் பகுதியை மீட்டெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டதைப் போலவே கொடுங்கையூரில் அடுத்த ஆறு மாதத்தில் திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சென்னை மாநகரின் மேயராக இருந்த காலகட்டத்தில்தான் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கான ஏற்பாடுகள் பலவாறு செய்யப்பட்டிருந்தது.

 

சென்ற திமுக அரசு இப்பகுதியை மேம்படுத்த திட்டங்கள் போட்டிருப்பினும் கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இருந்தவர்கள் இந்தப் பகுதியைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். உண்மையிலேயே இந்தக் குப்பைகளை எடுத்து பிரித்து நீக்கக்கூடிய இந்த திட்டமானது, சென்னைக்கு மிகப்பெரிய விடியல். இது முதலமைச்சரின் கனவு திட்டம். இப்பகுதியிலுள்ள செங்கல் படிவங்கள், பிளாஸ்டிக் குப்பைகளை மக்கும் மக்காத குப்பைகள் என அவற்றைப் பிரித்தெடுத்து சீர்படுத்தி, இதேபோல உள்ள கொடுங்கையூர் குப்பைமேட்டுப் பகுதி நிலத்தையும் பசுமையாக மாற்றுவதற்கான முயற்சிகளை இந்த அரசு மேற்கொள்ளும்” என்று மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.