Skip to main content

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை துவக்கிவைத்த முதல்வர்!

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

jkl

 

கரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் இந்த ஒமிக்ரான் கரோனாவால் இதுவரை பெரிய அளவிலான உயிரிழப்பு ஏற்படவில்லை. இதற்கிடையே ஒமிக்ரான் மற்றும் கரோனா பரவலையொட்டி, சில நாடுகள் மக்களுக்குப் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்துவது குறித்து ஆலோசனையைத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், இன்று முதல் முன்களப் பணியாளர்கள், 60 வயதை தாண்டிய இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

 

அதன்படி இந்தியா முழுவதும் இந்தப் பூஸ்டர் டோஸ் போடும் பணி இன்று காலை துவங்கியது. இந்தியாவில் 35 கோடி பேர் இந்தப் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட தகுதி உள்ளவர்களாக இருக்கிறார்கள். தமிழகத்தில் இந்தப் பூஸ்டர் டோஸ் போடும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டினப்பாக்கத்தில் துவங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பரமணியன், சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். தமிழகத்தில் ஏறக்குறைய 34 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதி உடையவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்