Skip to main content

எம்.எல்.ஏ. விடுதியில் சோதனை - அமைச்சர் அறையிலும் சோதனை

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

 

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தங்கும் விடுதியில்  பணம் பதுக்கி வைக்கப்பட்டிருபதாக வந்த தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும்படையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.  வருமான வரித்துறை அதிகாரிகளும் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.  இரவு 10.30 மணிக்கு தொடங்கிய சோதனை 12.15 மணிக்கு நிறைவு பெற்றது.

 

எம்.எல்.ஏக்கள் விடுதியின் ‘சி’பிளாக்கில் சோதனை நடைபெற்றது.    சி பிளாக்கில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் அறையிலும் சோதனை நடைபெற்றது.

 

ம்

 

சார்ந்த செய்திகள்